Thanjavur

News September 4, 2024

காதணி விழா நடைபெற இருந்த நிலையில் மாணவர் உயிரிழப்பு

image

திருக்காட்டுப்பள்ளி இந்தளூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் சாய்ராம். தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலை தனது அண்ணுடன் அருகில் உள்ள கல்லணை கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். சாய்ராமுக்கு இன்று காதணி விழா நடைபெற இருந்த நிலையில் அவர்‌ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 4, 2024

பள்ளி மாணவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயம்

image

பூதலூர் அருகே இந்தலூரில் இன்று காலை ஆற்றில் அண்ணனுடன் குளிக்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் ஆற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து பூதலூர் போலீசாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படையினர் வருகை புரிந்து பையனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News September 4, 2024

தஞ்சாவூா் படுகொலை வழக்கு: 5 பேர் மீது பாய்ந்த குண்டர்

image

தஞ்சாவூா் களிமேடு கிராமத்தைச் சோ்ந்தவர் ஸ்ரீராம். இவரை கடந்த ஜூலை மாதம் சிலா் வெட்டி படுகொலை செய்தனா். இது தொடர்பாக ஜீவா, தனுஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனா். இந்நிலையில் ஜீவா, தனுஷ், ஷியாம் சுரேஷ், ஆரோக்கிய டேனில்ராஜ், ஹரிசங்கா் ஆகிய 5 பேரை எஸ்பி ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் நேற்று உத்தரவிட்டாா்.

News September 3, 2024

தஞ்சை மாவட்டத்தில் குறைந்த கரும்பு சாகுபடி பரப்பளவு

image

தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர்‌ அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலையில் பகுதியில் 6,000 ஏக்கரில் கரும்பு சாகுபடி நடைபெற்றது. இங்கு 6 லட்சம் டன் அறுவை செய்யப்பட்டது. ஆனால், தற்போது கட்டுப்படியான விலை கிடைக்காததால், வெட்டுக்கூலி உயர்வு, உரம் உள்ளிட்ட இடுப்பொருளின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் தற்போது பரப்பளவு குறைந்து 1,500 ஏக்கரில் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

News September 3, 2024

தஞ்சையில் சுயதொழில் தொடங்க 15 லட்சம் கடன்: ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க 25% மானியத்துடன் 15 லட்சம் வரை நிதி உதவி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய இளைஞர்கள் http://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.

News September 3, 2024

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

image

அதிராம்பட்டினம் அருகே உள்ள நரசிங்கபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தருண்குமார் (14). 9-ஆம் வகுப்பு பயின்று வந்த தருண்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தான். இதைத்தொடர்ந்து தருண்குமார் பெற்றோரின் ஒப்புதலுடன் மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

News September 3, 2024

தஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தஞ்சையில் நடக்கிறது. இந்த முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 2000-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. மேலும் இதில் 19-25 வயதிற்கு உட்பட்ட 12 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

தஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 6 ,7 ந்தேதி தஞ்சையில் நடக்கிறது. இந்த முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 2000க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. மேலும் இதில் 19 முதல் 25 வயதிற்கு உட்பட்ட12 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

தஞ்சையில் ரூ.559 லட்சம் ஒதுக்கீடு

image

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 2024 – 25ஆம் நிதி ஆண்டிற்கு 57 நபர்களுக்கு ரூ.559 லட்சம் மானியமாக வழங்கிட இலக்கு செய்யப்பட்டுள்ளது. மூன்று வார காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கிகள், தாட்கோ மூலம் கடன் பெறலாம். இதன் திட்ட மதிப்பீட்டில் 75 லட்சம் வரை முதலீட்டு மானியம் 3% பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 2, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 648 மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 648 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!