India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பிரமணியன் தான் படித்த திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். தான் தங்கிப் படித்த கல்யாணி மாணவர் விடுதி, நான் படித்த வகுப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்தார். பள்ளி நுழைவாயிலில் சிவசாமி ஐயர், நாராயணசாமி ஆகியோர் சிலைகளுக்கு புகழஞ்சலி செலுத்தினார். பள்ளி தலைமையாசிரியர் அவரை வரவேற்றார் வரவேற்றார்.
சதீஷ்குமார் என்பவர் பேராவூரணி காவல்நிலையத்தில் கடந்த 2023ஆண்டு காவலராக இருந்த போது, நடைபெற்ற உதவிஆய்வாளர் தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் கட்டாய ஓய்வு அளித்துள்ளார்.
சதீஷ்குமார் தற்போது கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாநகர் பகுதியில் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். சைபர் கிரைம் உதவி உடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், மருத்துவகல்லூரி மருத்துவமனை பகுதியில் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்ககளை துரிதமாக மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு – குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் முதல் முறையாக தரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழக அரசால் 25% அதிகபட்சமாக 1 லட்சம் வரை மானிய வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தை அணுகி சிறு – குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் -2024 மாநாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகால்சோழன் கலையரங்கத்தில் நாளை (நவ – 23) நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம். டிச.20ஆம் தேதி கடைசி நாள் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருடாந்திர ஆய்வுக் கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணத்தொகை 6 நபர்களுக்கு தலா 1 லட்சம் வீதம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். அவருடன் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வடகிழக்கு மழை பெய்து வரும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றி வந்த வி. திருவள்ளுவன் டிசம்பர் 12ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் நேற்று திடீர் சஸ்பெண்ட் செய்து ஆளுநர் மாளிகை திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் அதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் கேட்டு முறையான பதவி இல்லாததால் நடவடிக்கை எடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.