India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, உட்கோட்ட போலீசார் தினமும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சட்டவிரோதமாக மது விற்ற 9 பேர், ரவுடி பட்டியலில் உள்ள 2 பேர், நீதிமன்ற பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த ஒருவர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன் கோயிலில் நேற்று விஜயதசமியை முன்னிட்டு வடபத்ர காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. காளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மேல அலங்கம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாப்பாநாடு காவல் சரக்கத்திற்கு வேளாங்கண்ணி குளக்கரை, ஆம்பலாப்பட்டு அருகில் போதைப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக பி [ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 5.295 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை என்பதற்கு ‘குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி’ என்று பொருள் ஆகும். தஞ்சை 8-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். இப்பகுதியினை சிறப்பாக ஆண்ட தனஞ்சய முத்தரையர் பெயரையே, இந்நகரம் பெயராகப் பெற்றது. தமிழகத்தின் ‘நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் ஆண்டுக்கு 3.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெறுகின்றன. இது தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 சதவீதமாகும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களிலும் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக மனநல தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மூலம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில்; வடக்கு வாசல் அன்பாலயத்தை சேர்ந்த 25 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்ப சுற்றுலா ஏற்பாடு இன்று செய்யப்பட்டது. பெரிய கோவில், அரண்மனை வளாகம், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை அங்காள பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முப்பெரும் தேவியரை வரவேற்கும்விதமாக 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. 108 பெண்கள் குத்துவிளக்குடன் வந்து கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை நடத்தினா். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் மற்றும் பிரசாதங்களை கோயில் அறங்காவலா் பி. செந்தில்வேலன், எஸ்.பி. கதிரவன் ஆகியோா் வழங்கினா்.
நந்தனம் வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பாக மறைந்த வணிகரின் குடும்பத்தினரான பட்டுக்கோட்டையை சார்ந்த க.சந்தானலெட்சுமி அவர்களுக்கு குடும்ப நல நிதி உதவித் தொகையாக ரூ.3,00,000/- காசோலை மற்றும் கும்பகோணத்தை சார்ந்த வி.இராஜசேகர் அவரவர்களுக்கு மருத்துவ நிதி உதவித் தொகையாக ரூ.50,000/- காசோலைகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செய்லபடும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடர்பான பாதிப்பு குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04362-230121 மற்றும் வாட்ஸ்ஆப் எண் 9345088997 ஆகிய எண்களை பயன்படுத்திக் கொள்ளமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி மாவட்டத்தில் 51 மழைமானிகள், 19 முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள், 4,550 முதல்நிலை மீட்பாளர்கள், 300 ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.