India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (62) என்பவரை பந்தநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 கிலோ ஹான்ஸ், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 7 ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை வர உள்ளார். அவரை வரவேற்பதற்காக திமுகவினர் தஞ்சை சாந்த பிள்ளைகேட் அருகே கொடிகம்பம் வைத்து வந்தனர். அப்போது கொடிக்கம்பம் ஊன்றும் போது உயரழுத்த மின்சாரம் தாக்கி ஒரத்தநாட்டை சேர்ந்த நாகராஜன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். இதனையடுத்து அவசரமாக கொடிகம்பங்களை திமுகவினர் அகற்றினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பசுந்தீவனம் பயன்பாட்டினை மேம்படுத்த 50% மானியத்தில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் புல் வெட்டும் கருவி பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஒரு கருவி 16 ஆயிரம் மானியத்தில் வழங்க உள்ளதால், தகுதி உடையவர்கள் வருகிற 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மையத்துக்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகளைச் சந்தைப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்துமாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓவிய, சிற்பக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் கலைஞர்கள் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் – சென்னை முன்பதிவு பேருந்துகள் கும்பகோணம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா. பொன்முடி தெரிவித்துள்ளாா். தீபாவளி பண்டிகை முடித்து கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை 60-க்கும் அதிகமான கும்பகோணம் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூத்தூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் அறிவுச் செல்வி. இவருக்கு விஜயபாலன் என்பவருடன் திருமணம் நடந்து திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் வசித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்தவர் நேற்று திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குணமங்கலம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் பாண்டிமீனா (23). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் 31ம் தேதி இரவு குணமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (31) என்பவர் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பாண்டி மீனாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாண்டி மீனாவின் தாய் செல்வி பூதலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இன்று வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம். SHARE IT.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் வெளியிட்டுள்ள செய்தியில், பூதலூர் அருகே தட்டாங்குளம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதனையடுத்து 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜேந்திரன், மங்களம், கார்த்திக் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.