India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் கூடலூர் சாலை வெண்ணாறு வடகரை சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சோதனை செய்த போலீசார் 2 கார்களில், 85 பொட்டலங்களில் இருந்த 136 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதனை கடத்திய ரவிச்சந்திரன் (44), சுப்பிரமணி (46), டேவிட் பெர்னாண்டோ (30), அய்யப்பன் (29) ஆகியோரை கைது செய்தனர். இதன் மொத மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் நாளை (நவ.9) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்ய பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
ராசராச சோழன் 1039 ஆம் ஆண்டு சதய விழா நாளை 9ஆம் தேதி மற்றும் பத்தாம் தேதி இரண்டு நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. 10ந் தேதி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் மாவட்ட ஆட்சியர் சோழன் சிலை பூங்காவிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அறநிலைத்துறை உடன் இருந்தனர்.
கும்பகோணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு குமார் என்பவரை தாக்கி செல்போன், பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்த வழக்கில் விஜய், பாட்ஷா, பார்த்தசாரதி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று பேருக்கும் மூன்று வருட சிறைத்தண்டனை, 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டியும், பல நலத்திட்ட உதவிகளையும் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கோவி.செழியன், TRB ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், சந்திரசேகரன், நீலமேகம், ஜவாஹிருல்லா உட்பட திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவையாறு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்ற போது, பின்னால் தஞ்சாவூர் எம்பி முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் இருவரும் ஒன்றாக சென்ற காரும் – பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தஞ்சாவூர் எம்பி முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் இருவரும் காயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 14 ஆயிரத்து 525 பயனாளிகளுக்கு ரூ.154 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்குகிறார். இந்நிகழ்வில் பங்குபெற உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சை வந்தடைந்தார். SHARE IT.
தஞ்சை தாலுக்கா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுபட்டினம் பகுதி கோரிகுளம் பகுதியை சேர்ந்த முருகேசன் (42). ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இன்று அவரது மனைவி சரண்யா (29) வெளியில் சென்று இருக்கும் நிலையில், தனது 4 வயது மகளான நவனிஸ்ரீ தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு, முருகேசனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேதத்தை கைப்பற்றி தாலுக்கா போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பன்னாட்டு அளவிலும் – தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கு விருது பெற தகுதி உடையவர்கள் வருகிற விண்ணப்பங்களை பெற்று 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
Sorry, no posts matched your criteria.