India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாமன்னன் இராசராச சோழனின் 1039 ஆம் ஆண்டு சதயவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் சதய விழாக் குழுவின் சார்பில் மாமன்னன் இராசராசன் விருதினை பேராசிரியர் கோ.தெய்வநாயகம் திரை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மருத்துவர் சி.குணசேகரன், கல்வியாளர் புனிதா கணேசன், சமூகக்கொடையாளர் குரு.சுப்ரமணிய சர்மா ஆகியோர்களுக்கு இன்று வழங்கினார். கவிப்பேரரசு வைரமுத்து பலர் உடன் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளை நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்கள் விடுதிகளை தமிழ்நாடு விடுதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கீழே நீத்துக்கார தெருவை சேர்ந்த ஹரிஹரன், ரெட்டியபாளயத்தை சேர்ந்த கந்தவேல், கரந்தை கல்லுக்காரத் தெருவை கோவிந்தராஜ் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரை பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைத்திட தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டனர்.
பிரபல நடிகர் டில்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். 1964 -1974 ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார். இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் பட்டின பிரவேசம் என்ற படத்தில் அறிமுகமாகி 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். என கூறி குடந்தை எம்எல்ஏ அன்பழகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்களது பெயரைச் சேர்க்க டிச.31ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. ஏற்கனவே பிறப்புச் சான்றிதழ் பெற்று அலுவலகத்தை அணுகி தங்களது பெயரை விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் நடைபெற உள்ளது என இம்மையத்தின் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் உள்ள நந்தி மண்டபத்தில் சோழன் விஜயன் நாட்டிய கலைஞர்கள், பாரம்பரிய இசை கருவிகளோடு 700 மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனம் ஆடினார்கள். இந்தக் கலை நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக நாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
தஞ்சாவூா் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சி நடைபெற உள்ளது என அம்மையத்தின் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளனர். SHARE NOW!
ஊரணிபுரம் பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் – தங்கமணி தம்பதியினர். இவர்களுக்கு திருமண நாளான நேற்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால் துணிகளை வீட்டில் இருந்த இரும்பு கம்பியில் காயப்போட்டுள்ளார். அப்போது இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் மின்சாரம் தாக்கிக் சம்பவ இடத்திலேயே தங்கமணி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாட்டு பண்ணை அமைக்க வரும் நவம்பர் 12 ஆம் தேதி இலவச பயிற்சிகள் நடைபெற உள்ளது என இம்மையத்தின் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.