India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்து 300 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 1,270 கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 53 கடைகள் உள்ளன.இந்நிலையில், தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகள், ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களை நடத்தும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதியினை பதிவு செய்யாமல் உள்ள விடுதிகளுக்கு 7.12.2024 வரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை தவறும் பட்சத்தில் மேற்கண்ட விடுதிகளுக்கு சீல் வைக்க நேரிடும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளனர்.
மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டம் மேற்படிப்பு பயில பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உதவிதோகை பெற மாணவர்கள் விண்ணப்பங்களை புதுப்பித்து பூர்த்தி செய்து 15.1.2025 க்குள் இதற்கான வலைதளத்தில் அனுப்பி வைக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: திருக்காட்டுப்பள்ளியில் 1.4 மில்லி மீட்டரும், திருவையாறில் 5 மில்லி மீட்டரும், தஞ்சாவூரில் 7.9 மில்லி மீட்டரும் கும்பகோணத்தில் 10.4 மில்லி மீட்டரும், பூதலூரில் 2.8 மில்லி மீட்டரும் வல்லத்தில் 2 மில்லி மீட்டர் ஒரத்தநாட்டில் 2.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது இன்றும் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூரியனார் கோவிலின் 28வது ஆதீனமாக மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் உள்ளார். இவர் பெங்களூரை சேர்ந்த ஹேமஸ்ரீ என்ற பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. மடத்தை விட்டு ஆதீனம் வெளியேற வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதனால், ஆதீனம் பொறுப்பு நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக ஆதீனம் எழுதி கொடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமை சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 15ம் தேதி காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கபிஸ்தலம், அம்மாபேட்டை அய்யம்பேட்டை, கும்பகோணம் மற்றும் பிற பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும், மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நியாயவிலைக்கடையில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் வலைதளத்தின் (WWW.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம்தெரிவித்துள்ளார்.
விபத்து மற்றும் வேறு காரணங்களால் கை கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயங்கள் வழங்குவதற்கான சிறப்பு அளவீடு முகாம் 13.11.24 புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. செயற்கை அவயங்கள் தேவைப்படுவோர் தகுந்த ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
ஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆஃபிஷேகத்தில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, பின்னர் கார் மூலம் தஞ்சை வந்தடையவுளார். மேலும் அவர் உலகப்புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று பார்வையிடுகிறார்.
Sorry, no posts matched your criteria.