India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குவதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சையில் இன்று (நவ.16) தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. திருத்தப் பணிகள் நவ.28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலின் படி பெயர் சேர்த்தல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் கைவினைக் கலைஞர்களுக்கு கடன் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே தஞ்சையில் வசிக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய சீக்கிய ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேதுபாவசத்திரம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், சேதுபாவாசத்திரம், பெருமகளூா், நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், குருவிக்கரம்பை, திருவத்தேவன், கட்டயங்காடு, மதன்பட்டவூா், கள்ளம்பட்டி, நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குழந்தையை வளர்க்க விரும்பாதவர்கள் தயவுசெய்து குழந்தையை ஏதும் செய்து விட வேண்டாம். அதிகாரிகளை தொடர்பு கொண்டு விபரங்களை கூறுங்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிலில் போடப்படும் குழந்தையை வளர்த்து அரசு காப்பகத்தில் பராமரிக்கப்படும்.
கலை பண்பாட்டு துறை தஞ்சாவூர் மண்டலம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் சவகர் சிறுவர் மன்றம் சார்பாக மாவட்ட அளவிலான கலை போட்டிகள் குரலலிசை, பரதநாட்டியம், ஓவியம் (23.11.2024) அன்று தஞ்சாவூர் கீழவிதி, பழைய அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நடத்தப்பட உள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். போட்டி நடைபெறும் அன்று ஆதார் நகலுடன் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுக்காக வழங்கப்படும் தொகை ரூ.5.65 லட்சத்திலிருந்து ரூ.5.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இவ்விருது பெறுவதற்கு பட்டியலினத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பகோணத்தை சேர்ந்த பாலாஜி என்ற இளைஞரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பாலாஜிக்கு 32 மாதங்கள் சிறை தண்டையும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி இளவரசி தீர்ப்பளித்தார்.
தஞ்சை பள்ளிய அக்ரஹாரம் தெற்கு தெருவில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு செல்லக்கூடிய மின் கம்பிகள் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால் திடீரென மின்சாரம் தடை ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு சேதமடைந்தன.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளின் நடைபெற உள்ளது. கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் இணைந்து ஆலோசிக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கும்பகோணம் அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட தலைமை அஞ்சலகம் மகாமகக் குளம் அருகே செயல்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத் தலைவா் டி. நிா்மலா தேவி வழிகாட்டுதலின்பேரில் பாா்வையற்றோா் எளிமையாக அஞ்சலகத்தை அணுகும் வகையில் கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் பாா்வையற்றோருக்கான தொடு உணா் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையற்றோர் பிறர் துணையில்லாமல் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.