Thanjavur

News November 20, 2024

தஞ்சை அருகே ஆசிரியை குத்திக்கொலை

image

தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவரை இன்று வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 20, 2024

கும்பகோணம்: துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்ட் 

image

சோழபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் கடந்து 2016 ஆம் ஆண்டும் அவரது மகன் சுகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் சரவணன் தற்போது நீலகிரியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.

News November 20, 2024

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை

image

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ட்ராமா ரெஜிஸ்ட்ரி அசிஸ்டன்ட்- 1 தேவை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தற்காலிக வேலை என்றும், நிரந்தர பணி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய கல்வித்தகுதி உடையவர்கள் கல்விச்சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாள் 25 ஆம் தேதி.

News November 19, 2024

தஞ்சையில் பொது ஏலம் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். பொது ஏலமானது, 20ஆம் தேதி நாளை 10.00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோர்ட் சாலை, பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

News November 19, 2024

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 19, 2024

குறுந்தொழில் தொடங்க கலைஞர் கடனுதவி

image

கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் புதிய மற்றும் ஏற்கனவே இயங்கிவரும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதனக் கடன்கள், அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் உதவி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு தொழிற்கூடம் கட்டுவதற்கும், இயந்திரங்கள் வாங்கவும் கடன் வழங்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News November 19, 2024

தஞ்சை: கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது

image

பாப்பாநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த நவ.12-ஆம் தேதி போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்ததில் சிவக்குமார் மற்றும் வைரதேவன் ஆகியோரிடமிருந்து 5.29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், இருவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

News November 19, 2024

ரூ.10 நாணயத்தை பயன்படுத்த ஆட்சியர் அறிவிப்பு

image

சென்னை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மை செயலாளர் ஆணையாளர் ரூ.10 நாணயத்தை அனைத்து மாவட்டங்களில் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், பொதுமக்கள் மற்றும் வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தினை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

பள்ளிக்கு விடுமுறை – தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார். கனமழை பெய்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 19, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், மதுக்கூர், புன்னைநல்லூர் உள்ளிட்ட பிற துணை மின் நிலையங்களில் நாளை (நவ.20) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

error: Content is protected !!