Thanjavur

News November 22, 2024

தஞ்சையில் ஆட்சியர் ஆய்வு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

News November 22, 2024

தந்தை பெரியார் விருது அறிவிப்பு

image

தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம். டிச.20ஆம் தேதி கடைசி நாள் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். 

News November 21, 2024

விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு நிவாரணம்

image

தஞ்சாவூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருடாந்திர ஆய்வுக் கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணத்தொகை 6 நபர்களுக்கு தலா 1 லட்சம் வீதம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்  வழங்கினார். அவருடன் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 21, 2024

தஞ்சையில் கனமழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு மழை பெய்து வரும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

News November 21, 2024

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்

image

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றி வந்த வி. திருவள்ளுவன் டிசம்பர் 12ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் நேற்று திடீர் சஸ்பெண்ட் செய்து ஆளுநர் மாளிகை திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் அதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் கேட்டு முறையான பதவி இல்லாததால் நடவடிக்கை எடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2024

தஞ்சை: ஆசிரியை உடலுக்கு அமைச்சர்கள் மரியாதை

image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியை ரமணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று ஆசிரியை உடலுக்கு நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். 

News November 20, 2024

தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

image

தமிழ்நாடு முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், வீராகுறிச்சி ஊராட்சியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுவிநியோகத் திட்ட சேமிப்பு கிடங்கில் உணவு பொருட்கள் இருப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 20, 2024

தஞ்சை ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்

image

தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) மாணவர்கள் கண் எதிரே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தை ‘மிருகத்தனமானது’ என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், குற்றவாளிக்கு உரிய தணடனை பெற்று தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

News November 20, 2024

தஞ்சை அருகே ஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை

image

தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) காலை ஆசிரியை ரமணி என்பவர் மாணவர்கள் கண்முன்னே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதனையடுத்து அப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

ஆசிரியை குத்திக்கொலை: அமைச்சர் கண்டனம்

image

தஞ்சையில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ‘ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது, மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியை மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். ஆசிரியை ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு இரங்கல்’ என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!