Thanjavur

News December 1, 2024

புயலின் எதிரொலியாக வேரோடு சாய்ந்த மரம்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது பகுதியில் புயலின் எதிரொலியாக இரவு சுமார் இரண்டரை மணி அளவில் மரம் வேரோடு சாய்ந்தன இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டன இருந்தாலும் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் நிறுத்தம் உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்புறப்படுத்தி வருகின்றனர்

News December 1, 2024

தஞ்சை மாவட்டத்தில் 458 வீடுகள் இடிந்து சேதம்

image

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழைக்கு 458 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. 43 கால்நடைகளும் உயிரிழந்தன. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அடைமழை பெய்தது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 53 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில் 33 குடிசை வீடுகள் அடங்கும். குறிப்பாக அக்.1 முதல் நேற்று வரை 458 வீடுகள் இடிந்து சேதமடைந்தது.

News November 30, 2024

கும்பகோணத்தில் தனி மாவட்டமாக மாற்ற போராட்டம்

image

கும்பகோணத்தை புதிதாக மாவட்டமாக அறிவிக்க கோரி பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக மாற்றுத் தரப்படும் என்று உறுதி அளித்தனர். தேர்தல் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்றும் நிறைவேற்றாமல் இருப்பதால் பாமக சார்பில் மக்கா ஸ்டாலின் தலைமையில் காந்தி சாலையில் போராட்டம் நடைபெற உள்ளது.

News November 30, 2024

17 வயது சிறுமி கர்ப்பம் – இளைஞர் மாயம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ் 2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஒரத்தநாடு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர்.

News November 30, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கான நேர்காணல் முகாம் அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (2.12.24) அன்று நடைபெற உள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். மேலும் திறன் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 30, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 2 தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News November 29, 2024

பள்ளி மாணவி கர்ப்பம் – இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

image

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 8 மாத கர்ப்பத்துடன் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பம் ஆக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News November 29, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நவ.29 (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைதீர்க்க கூட்டம் நடைபெறும் மறுஅறிவிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

News November 28, 2024

தஞ்சை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) மற்றும் நாளை மறுநாள் (நவ.30) தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் பதிவிடவும்..

News November 28, 2024

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: 2 இளைஞர்கள் கைது

image

திருவிடைமருதூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைப்பயிற்சி சென்ற மணிமேகலை(62) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் தாக்கி நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அகமதுயாசின் (20) மற்றும் ஏசுகவிபாலன் (21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 சவரன் தங்கநகை மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!