India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
களிமேடு கிராமத்தை சேர்ந்த் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அப்பெண் காதலனை திருமணம் செய்து கொண்டு விசாரணையை முடித்து வைக்க கோரினார். நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக பெண்ணிற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபாேன்ற புகார்களுக்கு கடும் தண்டனை என தஞ்சை மாவட்ட போலீஸ் எச்சரித்தது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (டிச.7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை டிசம்பர் 12ஆம் தேதி அடையும் என கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான சிறப்பு முகாம்கள் வரும் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தனியாா் பொதுத்துறை நிறுவனங்களை விட, பொதுமக்களுக்குக் குறைவான தவணையில் (பிரீமியம்) நிறைவான போனஸ் வழங்கி வருகிறது.
தஞ்சாவூா் அருகே ஞானம் நகரில் எஸ். பசுபதி (55) என்பவா் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இக்கடைக்கு நவம்பா் 29- ஆம் தேதி பசுபதி இல்லாதபோது வந்த அடையாளம் தெரியாத பெண், 2 பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைத்தாா். இதற்கு கடையில் இருந்த ஊழியா் ரூ. 87 ஆயிரம் கொடுத்தாா். பின்னா் பசுபதி வந்து நகையைச் சோதனையிட்டபோது, அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, திருவையாறு, சேதுபாவசத்திரம் தஞ்சாவூர் 33kv விகிதம் ஆகிய இடங்களில் நாளை (டிச.7) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், கரந்தை, திருவையாறு, விளார், EB காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் விருட்சம் தஞ்சை தாய்சேய் நலம் கூட்டம் இன்று (05.12.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்து ஆலோசித்தார்.
டிசம்பர் 6 ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடமைகளை மோப்பநாய் ராக்கி உதவியுடன் தீவிர பரிசோதனை பிறகே உள்ள அமைதிப்படுகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களிலும் போலீசார் பரிசோதனை செய்கின்றனர்.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.நேற்று மாநகராட்சி ஊழியர்கள் தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பீரங்கி மேடு, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். கடை மற்றும் குடோனில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தம்ளர்கள் உள்ளிட்ட 3டன் பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் மன்ற செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடும் போட்டிகள் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரிய கோயில் நடராஜர் சன்னதியில் நடக்கிறது. இதில், 3 ஆம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3 நிலையாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் வழங்க வேண்டும். ஒவ்வொரு கால்நடைகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளி வாகனத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.