India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த வினோத் – மோனிஷா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், தர்னீஸ் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தர்னீஸ் இன்று வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது, வீட்டின் முன்பு இருந்த வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து அங்கு தேங்கி இருந்த மழைநீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அரண்மனையை அடுத்துள்ள தாஸ்தமால் சந்து பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததால் பராமரிப்பும் செய்யப்படவில்லை. இதனால் கோவில் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. நேற்று தொடர் மழையின் காரணமாக செங்கற்களால் ஆன இந்த கோவில் இடிந்து சரிந்தது.
பூதலூர் அருகே வெண்டையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (49). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிவா (35) என்பவருக்கும் சொத்து குறித்து முன் விரோதம் உள்ளது. சிவா, அவரது சகோதரர் சிவகுமார், தந்தை ராஜேந்திரன் ஆகியோர் ஜெயபால் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து ஜெயபாலை கட்டையால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து தஞ்சை டிஎம்சி யில் சேர்க்கப்பட்டார். பூதலூர் போலீசார் வழக்குப்பதிந்து சிவாவை கைது செய்தனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக தஞ்சை உட்பட பல்வேறு டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.12) இரவு 10 மணி வரை தஞ்சை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் தெரிவிக்கவும். உடன் செய்தியை ஷேர் செய்யவும்!
இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகிழக்கு பருவமழை தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை எண் 1077. 04362-230121. பருவமழை தொடர்பான புகார்களை இந்த எண்களில் தெரிவிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று (டிச.12) கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
தஞ்சாவூர் மாதாகோட்டையில் கடந்த 4 தேதி பணி முடிந்து நடந்து சென்ற ஆசிரியரிடம் செயினை மர்ம நபர்கள் வழிப்பறி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடன் தங்க நகைகள் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
திருச்சி- தாம்பரம் சிறப்பு இரயிலினை தினசரி இயக்க வேண்டும், தாம்பரம் இரயிலினை பட்டுக்கோட்டை, பேராவூரணி வழிதடத்தில் இயக்க வேண்டும், தஞ்சாவூர் விழுப்புரம் மெயின் லைனை ஒரு வழி பாதையில் இருந்து இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இன்று டில்லியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.