India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரான வி.சி. சந்திரகுமாருக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூ சந்தைகளில் நேற்று (ஜன.12) மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000, முல்லைப்பூ கிலோ ரூ.2,500 என விற்பனையாகி சில்லறை வியாபரிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இருப்பினும் பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கிச் சென்றனர்.
கருப்பூர் மேலத்தெரு பகுதியில் சட்டவிரோதமாக காரைக்காலிலிருந்து பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பந்தநல்லூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் சுமார் 1300 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகளான அசோதமன் மற்றும் அனுசியா ஆகியோரை கைது செய்ததாக காவல் கண்காணிப்பாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை கொண்டப்ப நாயக்கன் பாளையம் தெருவில் புனித தாமஸ் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. நேற்று வழக்கம்போல பணிக்கு வந்த தலைமை ஆசிரியர், அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 25,000 கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு செல்லும் உழவன் விரைவு ரெயில் கடந்த ஆண்டு வரை சென்னையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை வேளையில் தஞ்சை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரயிலின் நேரம் மாற்றப்பட்டு இரவு 10.25 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை ஆடுதுறை 4.17 மணிக்கும், கும்பகோணம் 4.28 மணிக்கும், பாபநாசம் 4.39 மணிக்கும் வந்து தஞ்சைக்கு காலை 5.30 மணிக்கு வந்து சேருகிறது. SHARE!
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவினை முன்னிட்டு வரும் 18.01.2025 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள், <
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் திராவிட கழகம் சார்பில் மனு அளித்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை செய்து பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக பெரியார் குறித்து அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உடையவர்கள்<
Sorry, no posts matched your criteria.