India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்ட செய்தி குறிப்பில், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் வருகிற 28ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில நிர்வாக காரணங்களால் இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டு, மறுநாள் வருகிற 29ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆட்சியரகத்தில் ஆய்வுக்கூடத்தில் தெரிவித்தது, தஞ்சாவூரில் மனிதநேய வார விழா இன்று முதல் ஜன. 30 வரை நடைபெறும், இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாணவர்கள் மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம், கலை சார்பிலும் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான, போட்டிகளும், மாணவர்களுக்கான பரிசு வழங்குதல் விழாவும் நடைபெறும் என தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்,
பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் மேலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சட்ட விரோதமாக புதுச்சேரி யூனியன் பிரேதச சாராய மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1510 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. கலியபெருமாள் மற்றும் சுமதியை 20ம் தேதி கைது செய்த நிலையில் இன்று (ஜன.23) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தஞ்சையில் நாளை (ஜன.24) பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமை மாவட்ட நிர்வாகமும், அனைத்து வங்கிகளும் இணைந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளன. உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகிற 24-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறப்படுகிறது. இதில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார் SHARE NOW
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (ஜன.23) ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் கோட்டாட்சியர் செ. இலக்கியா தெரிவித்துள்ளார்.
பருத்திக்கோட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு உழவர் அட்டை கேட்டு விண்ணப்பித்தபோது, விஏஓ தனபாலசுப்ரமணியன் ரூ.700 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் தனபாலசுப்பிரமணியனுக்க 2 ஆண்டு சிறை தண்டனை – 1,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு.
தஞ்சை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற கோவில்கள், அரண்மனைகள் என விடுமுறை நாட்களை குடும்பத்துடன் செலவிட பல இடங்கள் அமைந்துள்ளன. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் அழகிய கடற்கரைகளும் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி ஒரு இடம் தான் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள புதுப்பட்டினம் கடற்கரை. வெண்ணிற மணல் அமைதியான சுற்றுப்புறம், ஆர்ப்பரிக்கும் அலைகள் என மிக அழகான இந்த கடற்கரைக்கு நீங்கள் சென்றது உண்டா?
பாபநாசம் தாலுகாவில் 22-ஆம் தேதி மக்கள் நேர்காணல் முகாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் சாலியமங்கலம், சரகம், திருபுவனம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற உள்ளது இம் முகாமில் பொதுமக்கள் தங்களது மேலான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உடனடி தீர்வு பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சி பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக தஞ்சை நகரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை நகர் பொதுமக்களின் நலன் கருதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21ஆம் தேதி மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. தஞ்சை நகர பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.