Thanjavur

News February 3, 2025

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56 வது நினைவு தினம் ஊர்வலம்

image

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (பிப்.3) தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணாவின்  சிலைக்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் MLA, தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர், மாவட்ட நிர்வாகிகள் சி.இறைவன், திரு. து. செல்வம், N.தர்மராஜன், மேயர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 3, 2025

கும்பகோணம்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

image

கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (20). இரும்பு கடையில் வேலை பார்த்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பல முறை தனிமையில் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜன.15 ஆம் தேதி சிறுமியை தனது வீடு அழைத்த வீரமணி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் குடந்தை போலீசார் வீரமணியை போக்சோவில் கைது செய்தனர்.

News February 2, 2025

கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி

image

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 20 வயது மதிக்கத்தக்க மாணவி திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பம் அடைந்துள்ளார். நேற்று (பிப்.1) பிரசவ வலி ஏற்பட்டு கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து youtube பார்த்து தொப்புள் கொடி அறுத்து யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியில் போட்டு மூடிவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார். இரத்த போக்கு அதிகமானதால் இச்சம்பவம் வெளியாகி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News February 1, 2025

தஞ்சை: பைக் மீது டாட்டா ஏசி மோதியதில் வாலிபர் பலி

image

திருச்சடைவழந்தை தங்கதுரை மகன் ராஜாராமன் (26). திருக்காட்டுப்பள்ளியில் (ஜன.30) பைக்கில் வரும் போது கூத்தூர் எடை மேடை அருகே வாழைக் கொல்லையிலிருந்து அதிவேகத்தில் வந்த டாட்டா ஏசி மோதியதில் ராஜாராமன் படுகாயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உரிழந்துவிட்டார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.

News February 1, 2025

கும்பகோணம்: விபத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் பலி

image

கும்பகோணம் அருகே இரண்டாம் கட்டளை பகுதியை சோ்ந்தவா் கருணாகரன் (43). கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக உதவியாளராக பணியாற்றும் இவர், நேற்று (ஜன.31) உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு தன் டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரைக்கால் மெயின்ரோடு சீனிவாசநல்லூா் பகுதியில் எதிரே வந்த டூவீலர் கருணாகரன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 31, 2025

த.வெ.க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நியமனம்

image

தமிழக வெற்றி கழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை வடக்கு மாவட்டத்தின் செயலாளராக தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் நியமித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News January 31, 2025

தஞ்சை அருகே பாம்பு கடித்து கொத்தனார் உயிரிழப்பு

image

பண்டாரவடை பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் (30). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய‌ பகுதிகளில் வருவாய் துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம்‌ 1,000 ரூபாய் தரவீதம் 4,17,999 பயணாளிகளுக்கு 41,79,99,000 பயன் பெற்று‌ வருவதாக தெரிவித்துள்ளார்.

News January 30, 2025

தஞ்சையில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று (ஜன.29) வெளியிட்டுள்ள செய்தி‌குறிப்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் போன்ற விண்ணப்பங்கள் கடந்த 2-ந்தேதி முதல் பெறப்பட்டு, இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (பிப்.28) -ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News January 30, 2025

தஞ்சை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோழிக்கழிச்சல் நோய் பாதிப்பால் கிராம பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் ஆண்டுதோறும் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 3,19,200 கோழிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் பிப்.1 முதல் பிப்.14-ந்தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்டுள்ளது.

error: Content is protected !!