Thanjavur

News April 1, 2025

மன வளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

image

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மன வளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தயாரிடன் சைகையில் கூறி அழுதுள்ளார். அதன்பின் திருவிடைமருதூர் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், சன்னகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 31, 2025

தஞ்சாவூர்ல உங்க வீட்டு குட்டீஸ்க்கு செம ட்ரீட் கொடுக்க தயாரா?

image

விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது தஞ்சாவூரில் மட்டும் இருக்கும் சூப்பர் பிளேஸ் (பொழுதுபோக்கு இடங்கள்) 1.சிவகங்கை பூங்கா 2.கல்லணை டேம் 3.தஞ்சாவூர் நாயக்கர் அரண்மனை, 4.சமுத்திரம் ஏரி பூங்கா 5. மனோரா பாயிண்ட் கலங்கரை விளக்கம் போன்ற இடங்கள் தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. குட்டிஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..

News March 31, 2025

பேராவூரணியில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

image

இன்று (மார்ச்.31)பேராவூரணியில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை யாம் வெளியீட்டகமும் ஆயர் சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்தியது. இந்நிகழ்வின் சிறப்புபயிற்சியாளராக சிவா அய்யணன்,பெரி,கபிலன் பிரகாஷ் ,பாஸ்கர்,முத்துக்குமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் .நீலகண்டன், சாரதி ,காளிதாஸ், மணிகண்டன் மற்றும் பயனாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

News March 31, 2025

தஞ்சை மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று (30.03.2025) வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கும்பகோணம் காவேரி திட்ட இல்லத்தில் புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.

News March 30, 2025

தஞ்சை: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!

News March 30, 2025

தஞ்சையில் நீச்சல் பயிற்சி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கோடைகால விடுமுறையையொட்டி, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 5 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த வகுப்புகள் முதற்கட்டமாக ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 13 வரை நடக்கிறது. இப்பயிற்சியில் பங்குபெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அறிய 04362 – 235633, 74017-03496 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

News March 30, 2025

ஒரத்தநாடு அருகே கார் பைக் மோதல், வாலிபர் பலி

image

ஒரத்தநாடு அடுத்த தெலுங்கன்குடிக்காட்டைச் சேர்ந்த முகிலன்(23). இவர் நேற்று முன்தினம் பைக்கில் ஓரத்தநாடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாளம்புத்தூர் மின்சார அலுவலகம் அருகே எதிரே வந்த கார் இவர் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

News March 29, 2025

பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

கும்பகோணம் செம்போடை அருகே உள்ள புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில் நாளை (மார்ச்.30) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம்1.00 மணி வரை தஞ்சை மாவட்ட டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் சாக்கோட்டை க. அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற உள்ளது.

News March 29, 2025

தஞ்சையில் பாலியல் வன்முறைக் குறித்தான‌ விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தஞ்சாவூர் மாவட்டம் NIFTEM கூட்டரங்கில் சமூக நலன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று துவக்கி வைத்தார்.

error: Content is protected !!