Thanjavur

News April 16, 2025

தஞ்சை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஏப்.16) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News April 16, 2025

தஞ்சையில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>tnrd.tn.gov.in <<>>வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்…

News April 16, 2025

தஞ்சை: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள ( Training Centre Manager) 90 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 16, 2025

தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் தொடக்கம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில், 150 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பது வழக்கம். ஆனால் தற்போது மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவித்துள்ளனர்.

News April 16, 2025

தஞ்சை: கோழிப்பண்னையில் தீ விபத்து

image

தஞ்சை, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (48) என்பவர் பர்மா காலனி என்ற இடத்தில் கொட்டகை அமைந்து 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<> mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

News April 15, 2025

தஞ்சையில் கோடை விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்

image

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் தஞ்சையில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: 1. பூண்டி மாதா பேராலயம், 2. மனோரா கோபுரம் மற்றும் கடற்கரை, 3. சிவகங்கை பூங்கா, 4.ஸ்வார்ட்ஸ் சர்ச், 5.பிரகதீஸ்வரர் கோயில், 6.கண்டியூர், 7. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், 8. திருவையாறு, 9. கும்பகோணம் ஆகியவை கோடைகாலத்திற்கு ஏற்ற இடங்கள் ஆகும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்தை கமெண்ட் பண்ணுங்க

News April 15, 2025

தஞ்சையில் வேலைவாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 40 CUSTOMER SUPPORT EXECUTIVE காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 30க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

சரும பிரச்சனைகள் தீர்வு சொல்லும் புன்னைநல்லூர் மாரியம்மன்

image

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் தேடும் பக்தர்களால் பிரசித்தி பெற்றது. அம்மை, சிக்குன் குனியா, தோல் புண் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டி இங்கு வருகிறார்கள். பக்தர்கள் இங்கு வந்து அனைத்து விதமான நோய்களிலிருந்தும் குணமடைய ஒரு வாரம் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள். சரும பிரச்சனைகளை தீர்வு கூறும் நம் புன்னைநல்லூர் மாரியம்மன்.உங்க ப்ரெண்ட்ஸ்க்கு #SHARE பண்ணுங்க

News April 14, 2025

தஞ்சை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!