India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (ஏப்.29) இந்த லிங்க்கை <
பட்டீஸ்வரம், கொற்கை பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறைக்குள் இருந்து நேற்று புகை வெளியேறிவுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் வகுப்பறைக்குள் இருந்த கல்வி உபகரணங்கள், மேஜைகள், மின் ஒயர்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
திருக்காட்டுப்பள்ளி விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் யோகேஷ் (16). தனது பிறந்தநாள் அன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் அதை குறித்து அறிய இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶செயற்பொறியாளா், தஞ்சாவூர்-04362-237010, ▶தஞ்சாவூா் மின்விநியோக சுற்றுவட்டாரம்- 04362-237448. இந்த எங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) வேலைக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே <
மானோஜிபட்டியைச் சேர்ந்தவர் கவியரசன் (24). இவருக்கும், அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிறுமியைக் கவியரசன் தனது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி 4 மாத கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின்கீழ் கவியரசனை கைது செய்தனர்.
திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது அந்தப் பால் நீல நிறமாக மாறும் அதிசயம் நடைபெறுகிறது. ராகு பகவான் இன்று மாலை 4:20 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு திருமண தடை நீங்கி ராகு தோஷ நிவர்த்தி பெறுங்கள். Share It Now
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.