Thanjavur

News March 12, 2025

தஞ்சாவூரில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

தஞ்சை கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வரும் மார்ச்.14 காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளது. இம்முகாமில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். SHARE NOW!

News March 12, 2025

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா ? கமெண்ட் செய்யவும்!

News March 12, 2025

தஞ்சை: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை முகாம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சையில் மார்ச் 13ஆம்,  கும்பகோணத்தில் மார்ச் 18, பட்டுக்கோட்டையில் மார்ச் 25ஆம் தேதி என  கோட்ட அளவில் ஆங்காங்கே நடைபெற உள்ளது. எனவே இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுதிறனாளிகள் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 12, 2025

தஞ்சைக்கு இன்று உள்ளூர் விடுமுறை

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (மா.12) மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க..

News March 11, 2025

தஞ்சை: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1 மணி வரை இந்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தி காலை முதலே ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது…SHARE NOW

News March 11, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கடந்த ஒரு சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மா.11) தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. SHARE NOW

News March 10, 2025

தாட்கோ மூலமாக இலவச சிறப்பு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

செங்கிப்பட்டி: மருத்துவமனையில் காலி பணியிடம் 

image

செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காசநோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில் மருத்துவ அலுவலராகப் பணிபுரிய விருப்பம் உள்ள எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிமுன் அனுபவம் உள்ளவர்களும், அரசு மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் மார்.20 க்குள் விண்ணப்பிக்கலாம். தஞ்சை கலெக்டர் அறிவித்துள்ளார்.

News March 10, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – ஆட்சியர்

image

தஞ்சை மாவட்ட கும்பகோணத்தில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 12ஆம் தேதி மாசி மகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க..

News March 10, 2025

தஞ்சாவூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை, இன்றே கடைசி நாள்

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மா.10) கடைசி நாளாகும். SHARE NOW..

error: Content is protected !!