Thanjavur

News April 29, 2025

தஞ்சாவூர்: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

தஞ்சாவூரில் கட்டயாம் தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறையின் அதிகாரிகளின் எண்கள்.
தஞ்சை எஸ்.பி.04362-277110/190 – வல்லம் டி.எஸ்.பி 9442720990 – கும்பகோணம் டி.எஸ்.பி 8870005315 – பட்டுக்கோட்டை டி.எஸ்.பி 9443617656 – ஒரத்தநாடு டி.எஸ்.பி 8248719390 – மாவட்ட குற்றப் பிரிவு 9498187373 – மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 9443569803 ஆகிய எண்கள் தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் Share செய்து பயனடையவும்..

News April 29, 2025

தஞ்சை கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

தொழிலாளர் தினமான (மே.1) தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

தஞ்சை பெரியகோயிலில் பந்தல்கால் முகூர்த்தம்

image

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருத்தேரோட்ட பந்தகால் முகூர்த்தம் நாளை (30-04-2025) காலை 9 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 29, 2025

குடிநீர் குறித்த பிரச்சனைகளுக்கு அழைக்க வேண்டிய எண்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அல்லது குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தங்கள் பகுதிகளில் குடிநீர் குறித்த பிரச்சனைகள் மற்றும் அடிப்படை குடிநீர் குறித்த புகார்களுக்கு நிர்வாக பொறியாளர், RWS பிரிவு, தஞ்சாவூர் – 04362-292467 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

News April 29, 2025

தஞ்சை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

image

தஞ்சை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை அந்தந்த கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 29, 2025

விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயக்கம் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்களில் விவசாயிகள் பயன் பெற tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

News April 29, 2025

அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

image

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது கும்பகோணத்திலிருந்து அய்யாவாடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நபர் யார் – எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2025

தஞ்சாவூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..

News April 28, 2025

பொதுமக்களிடம் இருந்து 710 புகார் மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News April 28, 2025

ஜவாஹிருல்லா வழக்கில் இடைக்கால தடை

image

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.50 கோடி நிதி பெற்றதாக பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜவாஹிருல்லா ஐகோர்ட்டில் முறையிட அங்கும் தண்டனை உறுதிசெய்யப்பட அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓர் ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

error: Content is protected !!