Thanjavur

News March 15, 2025

தஞ்சையில் வேலைவாய்ப்பு, ரூ.75,000 வரை சம்பளம்

image

ECHS தஞ்சாவூரில் DEO, Peon, Medical Officer ஆகிய பணிகளுக்கு 6 காலியிடங்கள் உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மா.15) கடைசி நாளாகும். ரூ.16,800 முதல் ரூ.75,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான முழு விவரம் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யவும்..

News March 15, 2025

இளைஞர் கொலை வழக்கு, 16 ஆண்டுக்கு பிறகு தண்டனை

image

தாராசுரம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், கடந்த 2009 ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா கொலை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகிய 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ. 3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News March 14, 2025

தஞ்சை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற Way2News!

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், Way2News சார்பில் சுரேஷ், சிங்காரவேலு, மதன் ஆகியோர் கலந்து கொண்டு தஞ்சை பகுதியைச் சேர்ந்த சுமார் 8 இளைஞர்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணை, மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பரமேஸ்வரி தலைமையில் வழங்கப்பட்டது.

News March 14, 2025

 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில் மார்ச்.18ஆம் தேதி கும்பகோணத்திலும், 25ஆம் தேதி பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள கிராம சபை கட்டடத்திலும் நடைபெற உள்ளது. தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

பாபநாசம் எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு சிறை

image

தஞ்சாவூர், வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டைனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.

News March 14, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு முக்கிய அறிவிப்புகள்

image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிய அரசு கலைக் கல்லூரி, தஞ்சையில் அன்புச்சோலை மையம், தஞ்சை நடுவூரில் தொழிற்பேட்டை, தஞ்சை கைவினை கலைஞர்களுக்காக பொதுவசதி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மக்களே SHARE பண்ணுங்க..

News March 14, 2025

கும்பகோணம் தனி மாவட்டமாகுமா?

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையாகும். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் தொடரில் கும்பகோணம் தனிமாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தஞ்சை மக்களே இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். மேலும், Share பண்ணுங்க.

News March 14, 2025

தஞ்சையில் வேலைவாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.14) நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட நிரப்பபட உள்ளன. மேலும் விபரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். வேலையில்லா உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 13, 2025

வியாபாரம் பெருக அருள் புரியும் விஜயநாதேஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எடுத்த செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் வந்து தொழுகின்றனர். தொழிலில் முன்னேற வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. Share It

News March 12, 2025

குழந்தை வரம் அருளும் நல்லாடை அக்னீஸ்வரர்

image

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It

error: Content is protected !!