India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சம்யுக்த்த கிசான் மோர்சாவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25 ஆம் தேதி தஞ்சாவூரில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பி.அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, கல்வி கடன் உள்ளிட்ட 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தஞ்சாவூர் மட்டும் 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழாவை முன்னிட்டு, பெருவுடையார் கோயில் வளாகத்தில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் இன்று (மார்ச்.03) காலை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் (ம) புதுச்சேரியில் நாளை தொடங்கும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதும் 8.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் 3500 மையங்களில் நடைபெற உள்ள இந்தத் தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். எந்தவித கவனச் சிதறலுக்கும் ஆட்படாமல் நேர்மையுடனும் துணிவுடனும் தேர்வை எழுதுங்கள்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மிகவும் விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழாவை முன்னிட்டு அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நாளை காலை (மார்ச் 3 ) திங்கட் கிழமை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு (ம) தமிழக அரசின் அனைத்து திட்டங்களின் பலன்களையும் பெற ஆதார் எண் போன்று தனித்துவமான மின்னணு முறையில் தேசிய அளவிலான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் வருகிற 31க்குள் தங்களது நிலத்தின் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்துகொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தெற்குவீதியை சேர்ந்தவர் நரசிராம் பட்டேல் (45). மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தொழில் ரீதியாக பட்டுக்கோட்டை சென்று மீண்டும் தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கீழவஸ்தாச்சாவடி பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நரசிராம் பட்டேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் ரூ.78,000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26 வயதுக்குள் இருக்கும் தகுதியானவர்கள் இங்கு <
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொண்டாம்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரவணன்-உஷா தம்பதியினர். இவரது குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும்போது பூண்டி பகுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வழிமறித்து நகைகளை பறித்து சென்றனர். அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். தற்போது 3 பேரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.