Thanjavur

News March 22, 2025

தஞ்சை டைடல் பார்க்கில் வேலை வாய்ப்பு

image

தஞ்சாவூர் டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

தஞ்சை வழியாக திருச்சி-சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ஆலோசனை

image

தஞ்சாவூர் வழியாக திருச்சி-சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ஆலோசிக்கப்படுகிறது என்றார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பின்னர் அவர் தஞ்சாவூர் வழியாக திருச்சி-சென்னைக்கு பகல் நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது என்று கூறினார்.

News March 21, 2025

கும்பகோணம்: 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்!

image

வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பகோணத்தில் அமைந்துள்ள சக்ரபாணி கோயில் மிகவும் விஷேசமான கோயில்களுள் ஒன்றாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தி காட்சி தருகிறார். சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்

News March 21, 2025

தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

image

தஞ்சை, கும்பகோணம் வழியாக வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. சார்ல பள்ளியில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கும்பகோணத்திற்கு வியாழன் மாலை 5 மணிக்கும், தஞ்சைக்கு 5.42 மணிக்கும் வந்து சேரும். மறு மார்க்கத்தில் வெள்ளி கிழமையில் கன்னியாகுமரியில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு தஞ்சை, 2 மணிக்கு கும்பகோணத்திற்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News March 21, 2025

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா?

image

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் 2ஆம் ராஜராஜனால் கட்டப்பட்டது. ஐராவதம் எனும் யானை தன் சாபத்தை போக்க இங்குள்ள சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. எமபெருமான் தான் பெற்ற சாபத்தை இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இங்கு கல்வெட்டுகளும் உள்ளது. இங்கு செ.மீ அளவு சிற்பம், சுவரோவியம், இசைப்படிகள், வித்தியாசமான சிற்பம் என ஏராளமான சிறப்புகள் உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க

News March 21, 2025

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

image

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரண வலி தணிப்பு சிகிச்சைப் பிரிவில் 2 தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடமாகும். இந்த பணி 11 மாதங்களுக்கு மட்டுமே. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி என கல்லூரி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News March 20, 2025

ஐந்து நிறங்களில் அருளும் பஞ்சவர்ணேஸ்வரர் திருத்தலம்

image

பாபநாசத்தை அடுத்த நல்லூரில் உள்ளது கல்யாண சுந்தரர் திருக்கோயில் இக் கோயிலில் அருள் பாலிக்கும் ஈசன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் 5 நிறங்களில் காட்சி தருகிறார். காலை 6 முதல் 8:15 வரை தாமிர வண்ணத்திலும், 8:15 முதல் 11 :30 மணி வரை இளஞ்சிவப்பிலும் , 11:30 முதல் மதியம் 2:30 மணி வரை தங்க நிறத்திலும் , 2:30 முதல் மாலை 5 மணி வரை நவரத்தின பச்சை நிறத்திலும், 5 முதல் 6 மணி வரை செம்மை காட்சி அளித்தார்.

News March 20, 2025

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 101 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 20, 2025

தஞ்சையில் வேலைவாய்ப்பு, ரூ.40000 வரை சம்பளம்

image

தஞ்சை மாவட்டத்தில் MTS, Lab Technician, Pharmacist போன்ற பிரிவின் கீழ் 35 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ரூ. 13000 முதல் ரூ. 40000 வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுகுறித்து மேலும் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யவும். பிறர் பயன் பெற ஷேர் செய்யவும்.

News March 19, 2025

சிவனின் தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தெரியுமா?

image

பிரம்மனுக்கு ஏற்பட்ட கர்வத்தினால் சிவபெருமான் அவர் தலையை கொய்தார். அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தான் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இத்தலத்தில் சிவனின் தோஷத்தை நீக்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு ஹரசாப விமோசன பெருமாள் என அழைக்கப்படுகிறார். இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. அறிய SHARE செய்யவும்

error: Content is protected !!