Thanjavur

News April 6, 2024

தஞ்சையில் நேற்று முதல் தொடங்கியது

image

தஞ்சை மாவட்டம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21,421 பேர் உள்ளனர். இவர்களில் 2,446 பேர் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான படிவம் பெற்றுள்ளனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் 12,294 பேர்களில் 5,067 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து அதற்கான படிவங்களை பெற்றுள்ளனர். நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வீடுகளுக்கே சென்று அலுவலர்கள் வாக்கு சேகரித்தனர்.

News April 5, 2024

தஞ்சாவூரில் விழிப்புணர்வு பலுான்

image

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு மாநகராட்சி சார்பில் 100 சதவீத நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது. நாடாளுமன்ற பொது பார்வையாளர் கிகேட்டோ சேம  இன்று 5-4-24 பார்வையிட்டார்.
மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 5, 2024

தஞ்சாவூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

image

இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அஞ்சல் துறை ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர்  அறிவுறுத்தலின் படி தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று 5.4.24 உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி விஷ்ணு பிரியா துவக்கி வைத்தார். அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

News April 5, 2024

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

image

தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து, பட்டுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஏப்.5) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ” I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றவுடன் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்; தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்” என வாக்குறுதி கொடுத்தார்.

News April 5, 2024

தஞ்சையில் திமுக கொடிகள் அகற்றம்

image

தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(ஏப்.4) பிரசாரம் செய்தார். இதற்காக திமுக சார்பில் வரவேற்க அண்ணாசாலை, பனகல் கட்டடம் சாலையில் திமுக கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதற்கு உரிய அனுமதி பெறாமல், தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததால் திமுக மற்றும் கூட்டணி கட்சி கொடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

News April 4, 2024

24 மணி நேரத்தில் தீர்க்க உத்தரவு

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

தஞ்சை: 214 நுண்பாா்வையாளா்கள் நியமனம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நுண்பாா்வையாளா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று(ஏப்.3) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளில், 114 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் வாக்குப்பதிவை கண்காணிக்க 214 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News April 4, 2024

தஞ்சாவூா்: தேர்தல் செலவின ஒத்திசைவுக் கூட்டம்

image

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மாா்ச் 30ம் தேதி வரையிலான தேர்தல் செலவின கணக்கு விவரங்களை ஏப்.1ம் தேதி தாக்கல் செய்தனர். இதற்கான 2ம் கட்ட செலவின ஒத்திசைவுக் கூட்டம் ஏப்.10ம் தேதியும், 3ம் கட்ட ஒத்திசைவுக் கூட்டம் ஏப்.17ம் தேதியும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

News April 3, 2024

ஒரத்தநாடு: ரூ.2.35 லட்சம் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியில் கீதாஞ்சலி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு வந்து கொண்டு இருந்த அந்த வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒரத்தநாடு தாசில்தார் சுந்தர செல்வியிடம் ஒப்படைத்தனர்.

News April 3, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு 

image

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் செயல்படும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப், தேர்தல் பொது பார்வையாளர் Y கிகேட்டோ சேம ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் உள்ளனர். 

error: Content is protected !!