Thanjavur

News April 12, 2024

தஞ்சை மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தஞ்சை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 12, 2024

நாடியம்மன் கோவில் தேர் திருவிழா

image

பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவில் மாலை 4.40 மணிக்கு பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நாடியம்மன் வீதிவலம் தொடங்கியது. தேரடித்தெரு, வடசேரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக தேர் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வந்தனர்.

News April 11, 2024

தஞ்சாவூர் போலீசார் கடும் எச்சரிக்கை

image

தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காவல் துறை வாகனம், ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்படும் நீல, சிவப்பு நிற ஒளி விளக்குகளை முறையான அனுமதியின்றி தனியார் வாகனத்தில் பயன்படுத்தினால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, தொடர்புடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது. 

News April 11, 2024

I.N.D.I.A கூட்டணி தேர்தல் பரப்புரை கூட்டம்

image

I.N.D.I.A. கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து, நேற்று மாலை (ஏப்ரல்.10) கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.செல்வ பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில், சு.கல்யாணசுந்தரம் எம்.பி, செ.ராமலிங்கம் எம்.பி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News April 11, 2024

வெயிலின் தாக்கம் குறையும்

image

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு

image

தஞ்சை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கும் பணி நடைபெறுவதை நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 10, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக நாளை 11.04.2024 தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 10, 2024

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 25 கேமராக்கள்

image

தஞ்சாவூர் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 10, 2024

சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம் 

image

ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் அண்ணா சிலை பகுதி வீட்டில் தனியாக வசித்து வருபவர் செல்லத்துரை மனைவி ராசாத்தி (70). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் படுகாயமடைந்த ராசாத்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 10, 2024

கோவிலில் நிதி முறைகேடு: பொன்மாணிக்கவேல் 

image

தஞ்சை தாலுகா காவல் நிலையத்திற்கு நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார். அதில் தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் குரு பரிகார தல மாக விளங்குகிறது. இக்கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிதியை தவறான வழியில் செலவு செய்த கோவில் செயல் அலுவலர் அதை கண்காணிக்க தவறிய இணை ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!