India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு வரும்
மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் உடனடியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார். ஏதேனும் குறைகள் இருந்தால் Saksham–Eci செயலி மற்றும் 1950 வழியாக பதிவு செய்து தீர்வு பெறலாம் என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (16.04.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.
தஞ்சாவூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன் பாண்டியன்(34). ஆசிரியரான இவர், காரில் திருச்சி சென்றுவிட்டு, இன்று தஞ்சை வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இதில் பொன் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, மினிலாரி ஓட்டுநர் நெடுஞ்செழியனும்(32) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வல்லம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி பழநியாண்டவர் வழிபாட்டுச் சங்கத்தின் மூலமாக கடந்த இரு மாதங்களாக கோயில் வளாகத்தில் திருப்புகழ் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முருக பக்தர்கள் திருப்புகழை பயில ஏதுவாக 150 திருப்புகழ் பாடல்களை தொகுத்து ” இருப்பவல் திருப்புகழ்”என்ற நூலை தயாரித்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் முருக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி ஏப்ரல் 20ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் புகழ்பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் பக்தர்கள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சித்திரை திருவிழா தேரோட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பெரிய கோவில் தேரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புகழ்பெற்ற இந்த தேர் திருவிழாவை எண்ணி பக்தர்கள் காத்துக்கிட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
மீன்கள் இனப்பெருக்கத்துக்கா ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14- ந்தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைகாலம் நடைமுறைபடுத்தி வரப்படுகிறது. அதன்படி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 146 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா்.
தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், வருகிற 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், ஜூன் 4-ந் தேதியும், 21-ந் தேதி மே தினமான 1-ந் தேதி ஆகிய நாட்களில் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.