India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். நேற்று(ஏப்.21) மதியம் இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் வயிறு வீங்கி, மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதேபோல கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. இது குறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், ஆடுகள் இறந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 24 ஆயிரத்து 200 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 90 ஆயிரத்து 301 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 129 பேர் என மொத்தம் 15 லட்சத்து 14 ஆயிரத்து 630 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 24 ஆயிரத்து 949 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்கு அளித்துள்ளனர்.
திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஏப்,22, திங்கட்கிழமை) நடக்கிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறின் 4 வீதிகளிலும் தேர் வீதி உலா வருகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள் .
தஞ்சை, பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று(ஏப்.20) இரவு 9 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று வந்தது. இதனை ரமேஷ்(45) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, திடீரென பேருந்தில் புகுந்த 10 பேர் கும்பல் டிரைவரை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பாபநாசம் திருப்பாலைத்துறை ஆவுல்காரத் தெருவில் பறந்து வந்த மயில், மின்சார கம்பி அருகே சென்றபோது அதன் உடல் மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி நேற்று(ஏப்.20) மயில் இறந்தது. தகவலறிந்து உடனே சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மயிலை எடுத்து சென்று பரிசோதனை செய்து திருமலை ராஜன் ஆற்றங்கரையில் புதைத்தனர்.
தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் இன்று(ஏப்.20) காலை தொடங்கி மேல வீதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மின் கம்பங்களில் தேரின் அலங்கார துணிகள் சிக்கி தாமதமாகி தேர் செல்வதில் தாமதமானது. இதையடுத்து தேரில் செய்யப்பட்டு இருந்த அலங்கார துணிகள் மற்றும் சவுக்கு கட்டைகள் அறுத்து அகற்றப்பட்டன. இதையடுத்து தேர் புறப்பட்டு சென்றது. இதனால் தேர் மேல வீதியை கடந்து செல்வதற்கே வெகு நேரம் ஆனது.
மக்களவைத் தேர்தலையொட்டி, தஞ்சை மாவட்டம் காவிரி கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் நேற்று(ஏப்.19) தங்களது ஓட்டுகளை பதிவு செய்வதற்காக வாகனங்களில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். காவிரி படுகை கிராமத்தில் இருந்து திருகாட்டுப்பள்ளி வந்து, பின்னர் திருவையாறு சாலையில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று(ஏப்.19) இரவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இதனை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு எஸ்பி தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் இருந்தனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. தேர் காலை 7 மணி முதல் 7.20 மணிக்குள் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தஞ்சை மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜவீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோவில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைதெரு , நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை ரோடு, சிரஸ் சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (20-ந்தேதி) காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.