Thanjavur

News April 25, 2024

தஞ்சை: உலக புத்தக நாள் விழாவையொட்டி நன்கொடை

image

உலக புத்தக நாளையொட்டி, தஞ்சாவூரில் நேற்று(ஏப்.23) வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 500 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதில், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராமச்சந்திரன் புத்தகங்களை வழங்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் பெற்றுக்கொண்டு, தலைமையாசிரியை சிவசங்கரியிடம் வழங்கினாா்.

News April 24, 2024

தஞ்சையில் புத்தக தின விழா கொண்டாட்டம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூச்சந்தை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் தஞ்சை பூச்சந்தையில் உள்ள பழக்கடைக்காரர் ஹாஜாமொய்தீன் ஆகியோர் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்கள்.

News April 24, 2024

பக்தரிடம் செல்போன், பணம் திருடிய 3 பெண்கள் கைது 

image

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் கடந்த மார்ச் 20ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பக்தர் ஒருவரின் செல்போன், ரூ.500 ஆகியவற்றை திருடியதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட சுபத்திரா, சுகந்தி, சுனிதா ஆகிய 3 பேரை இன்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

News April 24, 2024

கும்பகோணம் அருகே சாலையில் சிக்கிய தேர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் அமைந்துள்ளது சாரங்கபாணி திருக்கோயில். இக்கோயிலில் இன்று(ஏப்.23) தேர் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தேரின் சக்கரம் சாலையில் உள்வாங்கியுள்ளது. கோயிலின் 4 வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தபோது, 10 அடி பள்ளத்தில் சிக்கியது. 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தேரை மேலே தூக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

News April 24, 2024

தஞ்சை: தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே ஒருவர் கொலை வெறி தாக்குதல் நடத்த உள்ளதாக திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் சத்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரை நேற்று(ஏப்.22) போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

News April 24, 2024

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புகழ்பெற்ற சாரங்கபாணி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 14ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை பல்லக்கிலும் மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில், முக்கிய விழாவான தேரோட்டம் இன்று  நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா, சாரங்கா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

News April 24, 2024

தஞ்சை: சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு

image

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ளது அருந்தவபுரம். இந்த ஊரின் குளக்கரை அருகே இருந்த பெரிய அரச மரத்தின் வேர் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக அரன்பணி அறக்கட்டளையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது 3.75 அடி உயரத்திலான ஆவுடையுடன் சிவலிங்கம் இருந்தது. இந்த சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் கொண்ட சோழர் காலத்தை சேர்ந்த சிவலிங்கம் என கூறப்படுகிறது.

News April 24, 2024

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தேரோட்டம்

image

பேராவூரணி பகுதியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்திரைத் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று(ஏப்.22)  நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன், முருகன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News April 24, 2024

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

image

தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி அருகில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் 
உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் லெனின் 154 வது பிறந்தநாளில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பாலஸ்தீனத்தின் காசா ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற்றப்பட வேண்டும். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து, அறிவிக்க வேண்டும். உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

News April 24, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்ப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடுகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!