India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், ஆங்காங்கு கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர், திருவையாறு, அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 10.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், தஞ்சை மாவட்டத்தில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில பட்டுக்கோட்டையில் நேற்று (மே.14) நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது முறையாக பராமரிக்காத 17 வாகனங்கள் உரிமம் ரத்து செய்யப் பட்டது. பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி திடலில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த 32 தனியார் பள்ளிகளில் உள்ள 218 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் -சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புகழ் மிகுந்த கோவிலை காண தமிழகம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகளவில் உள்ளது.
தஞ்சை கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.சித்ரா அறிவுறுத்தலின் பேரில், பட்டுக்கோட்டை நகர, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் நேற்று (மே.14) பட்டுக்கோட்டையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலம் ஹோட்டல் குளிர்பான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தரம் குறைவான பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2024 வரை கும்பகோணம் மண்டலத்தில் உள்ள அரசு டவுன் பஸ்களில் மகளிர் பயனாளிகள் 14 கோடியே 79 லட்சத்து 93 ஆயிரத்து 735 பேரும், மாற்றுத்திறனாளிகள் 8 லட்சத்து 45 ஆயிரத்து 192 பேரும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 37 ஆயிரத்து 315 பேரும், திருநங்கைகள் 68 ஆயிரத்து 186 பேரும் என மொத்தம் 14 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரத்து 428 பயனாளிகள் கட்டணமில்லா பஸ் பயணம் செய்தனர்.
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பருவத் தேர்வு முடிவுகள் இன்று மாலை www.kngac.ac.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறுகூட்டல் மற்றும் ஒளிநகல் பிரதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2024, மறுமதிப்பீட்டுக்கு கடைசி நாள், 08.06.2024, உடனடி தேர்விற்கு 11.06.2024 கடைசிநாள் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தஞ்சை பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் நேற்று வந்தார். அப்போது அவர், “இலங்கை பொருளாதாரத்தில் நலிவடைந்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது” எனக் கூறினார்.
கும்பகோணம் ஒன்றியம் கள்ளப்புலியூர் ஊராட்சி மணஞ்சேரி கிராமம் இராமன் உதவி பெறும் தொடக்கப்பள்ளி முகவர் மற்றும் செயலர். ச ஜெயக்குமார் இன்று அவரது பள்ளியை தருமையாதீன குருமணிகள் வசம் ஒப்படைத்தார். தொடரந்து இப்பள்ளிக்கு கும்பகோணம் கார்த்திகேயன் என்பவரை செயலராக நியமித்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருட்பிரசாதம் வழங்கினார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.