India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டம் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் தீபக் ஜேக்கப் இன்று(20.6.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் பலர் உள்ளனர்.
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி எம்பி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் தலைமையில் நேற்று(ஜூன்19) கும்பகோணம் காங்கிரஸ் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர் .சுதா துவங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜுன்19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தஞ்சாவூர்,பாபநாசம்,திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், வல்லம், ஒரத்தநாடு ஆகிய உட்கோட்டங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு சுமார் 308 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு. தஞ்சாவூர் 34 மிமீ, வல்லம் 20 மிமீ, குருங்குளம் 36.20 மிமீ, திருவையாறு 23 மிமீ, கும்பகோணம் 26 மிமீ, பாபநாசம் 40 மிமீ, கீழ் அணை 54.80 மிமீ, அய்யம்பேட்டை 24 மிமீ, ஈச்சன்விடுதி 12.40 மிமீ, பூதலூர் 15.60 மிமீ பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 317.80 மிமீ அளவிற்கு பதிவாகியுள்ளது.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி துணைக்காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையில் பல்வேறு புகார் மனுக்களை பொதுமக்கள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் சிவ.செந்தில்குமார், ஜெகதீசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதம்தோறும் 3ஆவது வெள்ளிக்கிழமை சிறு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும். இதேபோல் வருகிற 21ஆம் தேதி சிறு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தஞ்சாவூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெருமாறு மாவட்ட ஆட்சியார் அறிவித்துள்ளார்.
தஞ்சை: மாநிலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக்ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிடத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தஞ்சை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தண்ணீர் இல்லாமல் போனதுக்கு என்ன காரணம் குறித்து மத்திய, மாநில அரசுகல் ஆராய வேண்டும் என்றும், கடந்தாண்டு முதல் ஏறத்தாழ 90 TMC-க்கு மேல் தண்ணீர் பாக்கி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், அண்ணா கூடைப்பந்து கழகம் (ANNA BASKETBALL CLUB), மகாமகம் கூடைப்பந்து கழகம் (MAHAMAHAM BASKETBALL CLUB ) இணைந்து நடத்தும் கூடைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.