India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே சமயபுரம் பாதயாத்திரை செய்த பக்தர்கள் மீது இன்று காலை மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பக்தர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரியங்கா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக பிரியங்கா ஐ.ஏ.எஸ். இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் 22ஆம் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சியும், 23ஆம் தேதி நாட்டுக்கோழி மற்றும் காடை வளர்ப்பு பயிற்சியும், 24ஆம் தேதி முயல் வளர்ப்பு பயிற்சியும் நடைபெறுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதம் தோறும் 3வது வெள்ளிக்கிழமை அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதேபோல் வருகிற 19ஆம் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில், பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 497 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,870 மாணவ – மாணவிகள் பயன் பெறுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல்.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், மழை பெய்யாததாலும் காய்கறி சாகுபடிகள் குறைந்துள்ளது. இதனால் தஞ்சாவூர் காய்கறி மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டது. தஞ்சை அரண்மனை வளாகம் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.30 க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.65க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.