India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஜூலை 26 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ‘Jio-Rilance’ நிறுவனம் பல்வேறு பணியிடங்களுக்கு 4,000க்கும் அதிகமானோரை தேர்வு செய்யவுள்ளனர். 10 & 12ஆம் வகுப்பு முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பட்டதாரிகள் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்; கூடுதல் விவரங்களுக்கு 04362 – 237037. தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணலாமே!
அண்மையில் தமிழக அரசு 10 மாவட்ட ஆட்சியர்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சியாக இருந்த தீபக் ஜேக்கப் மாற்றப்பட்டு ப்ரியங்கா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா ஐஏஎஸ் தஞ்சாவூர் மாவட்ட புதிய ஆட்சியராக இன்று(ஜூலை 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கும்பகோணம் அருகே கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது பிரசித்தப்பெற்ற சூரியனார் கோயில். ஞாயிற்றுக் கிழமையையான நேற்று(ஜூலை 21) இக்கோயிலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்றைய வெப்ப நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழநாட்டில் அதிகபட்சமாக தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் தலா 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக மதுரை விமான நிலையம் 102, காரைக்காலில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுமையான வெப்பத்தால் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கும்பகோணம் அடுத்த திருநறையூர் சித்தநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.1கோடி மதிப்புள்ள 18 ஏக்கர் தரிசு நிலத்தை அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். இதையறிந்த கும்பகோணம் அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா,தாசில்தார் செந்தில் மற்றும் செயல் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நிலத்தை மீட்டு முள்வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை வைத்தனர். தஞ்சையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு சம்பவத்தை கண்டிக்குமா அரசு?
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் தீபக் ஜேக்கப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் ஜூலை 24ஆம் தேதி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளதால், மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை ரயில்வே திட்டங்கள் குறித்து தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள் நேற்று DRM உடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அவர்கள் ரயில் பயன்பாட்டாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் அரண்மனை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடமாடும் புத்தகத் திருவிழா பேருந்தினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில், தஞ்சாவூர் எம்பி முரசொலி சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் பேருந்தினை கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார்கள். இதில் மேயர்கள் ராமநாதன், சரவணன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி கோட்டாட்சியர் இலக்கியா, மாநகராட்சி ஆணையர் உட்பட பலர் உள்ளனர்.
தஞ்சையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கீழ குறிச்சியில் நடந்த இந்த விபத்தில், தாய், மகள் மற்றும் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாயும், மகளும் பேருந்தை கடக்க முயன்றபோது, பைக்கில் வந்த இளைஞர் மீது மோதி இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.