Thanjavur

News July 24, 2024

மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி

image

தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்ட செய்தி குறிப்பில், “இந்திய தபால் துறை சார்பில் “களஞ்சியம்@79 இ” என்ற தலைப்பில் தமிழ் பல்கலை.யில் ஆக.8,9 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் தலைகள் இடம் பெறவுள்ளன. தபால் தலை சேகரிப்பாளர்கள் கலந்து கொண்டு தபால்தலைகளை காட்சிப்படுத்தலாம்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News July 24, 2024

தஞ்சாவூர்: உயர் பதவிகளை அலங்கரிக்கும் பெண்கள்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக ப்ரியங்கா பங்கஜம், நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளராக மோகனா, வ.கோட்டாட்சியர்கள் இலக்கியா, ஜெயஸ்ரீ, பூர்ணிமா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்க பதிவாளர் தமிழ்நங்கை , உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சித்ரா, வேளாண் இணை இயக்குநர் சுஜாதா ஆகியோர் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.

News July 23, 2024

தஞ்சை:விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 26 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு, கால்நடை துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைய ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

News July 23, 2024

வேளாண் அலுவலர்களுடன் தஞ்சை கலெக்டர் ஆலோசனை

image

தஞ்சை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா பங்கஜம், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து நேற்று விவசாய அலுவலர்களை அழைத்து சிறப்பு கூட்டம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு நம்மால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News July 23, 2024

அதிகளவு நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

image

கல்லணையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதேபோல் மேட்டூரில் 82 அடியாகவும், 43.978 தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு 79,682 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1002 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூருக்கு அதிகப்படியாக தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

News July 23, 2024

பட்ஜெட் 2024ல் தஞ்சாவூருக்கு கிடைப்பது என்ன?

image

3 ஆவது முறையாக ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு இன்று(ஜூலை 23) ‘மத்திய பட்ஜெட் 2024’ஐ தாக்கல் செய்யவுள்ளது. இதில், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, உரம் மானியம் குறைப்புக்கு தீர்வு, பயிர் காப்பீடு வழங்க வேண்டும் & கரும்பு, நெல் ஆதார விலையை அதிகரிப்பது என்பது தஞ்சை மக்களின் எதிபார்ப்பாக உள்ளது. இதேபோல் பட்ஜெட்டில் தஞ்சாவூருக்கு வருபவை குறித்து உங்கள் கருத்து?

News July 23, 2024

தஞ்சை மாவட்டத்தின் 2 ஆவது பெண் கலெக்டர்

image

தஞ்சை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நேற்று(ஜூலை 22) பிரியங்கா IAS பொறுப்பேற்றுக்கொண்டார். தஞ்சையில் 2 ஆவதாக பணியமர்த்தப்பட்ட பெண் ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 1984 ஆம் ஆண்டு(40 ஆண்டுகளுக்கு முன்பு) ஓ.பி.சோசம்மாள் என்பவர் தஞ்சை கலெக்டராக பணியாற்றினார். விவசாயத்திற்கும், கிராமப்புற மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஆட்சியர் பிரியங்கா உறுதியளித்துள்ளார்.

News July 22, 2024

தஞ்சையில் அதிகரித்த காய்கறி விலை

image

தஞ்சை மார்க்கெட்டில் இன்று காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது. கேரட் கிலோ ரூ.100-யை எட்டியது. தக்காளி கிலோ ரூ.64, உருளைக்கிழங்கு கிலோ ரூ.48,கத்தரிக்காய் கிலோ ரூ. 50, வெண்டைக்காய் கிலோ ரூ.34, அவரைக்காய் ஒரு கிலோ ரூ.80, புடலங்காய் கிலோ ரூ.42, பாகற்காய் கிலோ ரூ.70 முதல் 96 ரூபாய் முருங்கைக்காய் கிலோ ரூ.76 பீர்க்கங்காய் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News July 22, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 410 புகார் மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூலை 22) ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

News July 22, 2024

கீழ்கண்ட இடங்களில் நாளை(ஜூலை 23) மின்தடை

image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயம் மற்றும் கும்பகோணம் அருகே சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(ஜூலை 23) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம் & கும்பகோணம் நகரம் தவிர உமா மகேஸ்வரபுரம், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், அரிய திடல், விசலூர், நாச்சியார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி – மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

error: Content is protected !!