India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் காவிரி ஆற்றில், நம்ம காவிரி தூய்மைக் குழு சார்பில் நேற்று தூய்மை பணிகள் நடைபெற்றது. இதனை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தூய்மைப் பணியினை மேற்கொண்டனர்.
ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் பூ சந்தையில் மல்லிகை கிலோ 500 ரூபாய், ஆப்பிள் ரோஸ் 150 ரூபாய், பன்னீர் ரோஸ் 100 ரூபாய், சம்மங்கி 200 ரூபாய், கனகாம்பரம் 600 ரூபாய், முல்லை 500 ரூபாய், மரிக்கொழுந்து 80 ரூபாய், செண்டி பூ 100 ரூபாய், அரளி 120 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). திமுக கிளை செயலாளரான இவரது வீட்டின் பால்கனியில் கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், ரவிக்குமார் (39), சிவனேசன் (22), அஜய்குமார் ஆகிய 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.
கல்லணையில் இன்றைய காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூரில் 89.31 அடியாகவும், 51.867 தண்ணீர் இருப்பாவும் உள்ளது. அணைக்கு 33,040 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1003 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர். தற்போது தஞ்சையில் வசித்து வரும் இவர் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பங்குச்சந்தையில் லாபம் பெற நினைத்து முகநூலில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.13.50 லட்சத்தை இழந்துள்ளார். இதுதொடர்பான புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ஒப்பீடு என்பது ஆபத்தானது. மற்றவருடன் ஒப்பீடு செய்வதன் மூலம் போட்டி, பொறாமை, தற்கொலை செய்யும் எண்ணங்கள் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.
கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸைச் சேர்ந்த சரவணன் பதவி வகித்து வருகிறார். இவர், மாமன்றக் கூட்டத்தை சரியாக நடத்துவதில்லை, தீர்மானத்திற்கு கையெடுத்து போடுவதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், மேயரை மாற்றச் சொல்லி திமுக தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கு கடிதங்கள் பறப்பதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அறிஞர் அண்ணா சக்கரை ஆலை தலைமை நிர்வாகி இரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
உலகப் புகழ்பெற்ற கல்லணை தண்ணீர் திறப்புக்கு தயாராகும் நிலையில் அணையின் அனைத்து பகுதிகளும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். அணையின் அனைத்து பகுதிகளும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரவை ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சரக்கு இரயில் மூலம் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு தலா 1,250 டன் வீதம் தேனி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.