India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதமாற்ற விவகாரத்தில் திருபுவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக என் ஐ ஏ அதிகாரிகள் இன்று கும்பகோணம் மேலக்காவேரி KMS நகரில் முகமது யூசுப் என்பவர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைப் போலவே கொரநாட்டு கருப்பூரில் முகமது பைசல் திருபுவனத்தில் சகாபுதீன் , திருமங்கலக்குடியில் ஹாலித் மற்றும் இம்தியாஸ் ஆகியோரது வீடுகளில் NIAசோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் யாரேனும் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய விற்பனை அல்லது உற்பத்தியில் ஈடுபட்டால், மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581 அல்லது 9042839147 என்ற வாட்ஸ்–அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக போலீஸ்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளிப்படுத்தப்படாமல் ரகசியம் காக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவ்க்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு கல்லணையை வந்து அடைந்தது. இன்று காலை 9.15 மணி அளவில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட உள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகள் அணையில் ஒளிரூட்டப்பட்டு பிரமிப்பாக உள்ளதையும் காண முடிந்தது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த பெண் மருத்துவருக்கு சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் செயலியில் வீட்டிலிருந்தே லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டலாம். முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் என குறுஞ்செய்தி வந்தது. இதை நம்பிய மருத்துவர் பல தவணைகளில் ரூ.69.69 லட்சம் ரூபாயை மர்ம நபர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொெண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் அப்சாரா(28). இவர் செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செங்கல்பட்டு அண்ணாநகரில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லணையில் நாளை காலை 9.15 மணியளவில் அமைச்சர்கள், டெல்டா மாவட்ட கலெக்டர்கள் டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட உள்ளனர். மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நீர் நாளை காலை கல்லணையை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத்தொடர்ந்து காலை 9:15 மணியளவில் அனைத்து விதமான பூஜைகளும் நிறைவுபெற்று தண்ணீர் திறக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் இன்று கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட பாசனத்திற்காக நாளை கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு இரயிலில் தலா 21 வேகன்களில் காட்பாடிக்கு 1,250 டன் புழுங்கல் அரிசியும் – தென்காசிக்கு 1,200 டன் புழுங்கல் அரிசியும் பொது விநியோகத் திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.