India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் பாபு. கொத்தனாரான இவர் வீட்டு வாசலில் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்த 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பெரிய கேரம் போர்டு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

கும்பகோணம் தபால் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற மார்ச்.30ஆம் தேதி வரை கும்பகோணம் தலைமை நிலையம், மேலக்காவேரி தலைமை நிலையம், கும்பகோணம் கோட்டத்தில் சுவாமிமலை, ஆடுதுறை, நாச்சியார்கோவில், பட்டீஸ்வரம், பந்தநல்லூர் ஆகிய துணை தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் புதிய அம்ரித் பாரத் அதிவிரைவு ரயில் இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த புதிய ரயில் சேவையை வரவேற்கும் விதமாக, காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்தும், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

சேலம் மாவட்டம் நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(25). கூகித் தொழிலாளியான இவர், திருவோணத்தை அடுத்துள்ள கலியரான்விடுதியில் தங்கி விவசாயப் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார், ஊரணிபுரத்திற்கு பைக்கில் சென்றபோது, சாலையோர தடுப்பு கம்பில் மோதியுள்ளார். இதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்ப இடத்திலே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தஞ்சாவூர், ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மீனா(50). இவர் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று, அவரது சகோதரி வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 9 கிராம் நகை மற்றும் வைர நகைகள் திருடு போயிருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கள்ள பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களை தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்து முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.