Thanjavur

News August 3, 2024

தஞ்சையில் 1கிலோ ரூ.800-க்கு விற்பனை

image

தஞ்சையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தேவையான பூ, பழங்களை வாங்க தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மக்கள் குவிந்தனர். அதேபோல் மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் பொட்டுக்கடலை, சர்க்கரை, வெல்லம் ஆகிய பொருட்களையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் இன்று கனகாம்பரம் பூ விலை, ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News August 2, 2024

திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் கோயில் சந்தனக்காப்பு அலங்காரம்

image

தருமை ஆதீனம் திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ஆடி மாதம் 3வது வெள்ளி கிழமையன்று தருமை ஆதீனம் ஸ்ரீ லஜஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் திருவுல பாங்கின் வண்ணம் தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை, அனைவருக்கும் அனுமதி இலவசமாக்கப்பட்டது .

News August 2, 2024

கும்பகோணத்தில் வடமாநில நபர்கள் மோசடி 

image

கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி வீட்டில் உள்ள பெண்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பெற்று அதனை பாலீஷ் போடும்போது அதனை கரைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பீகாரை சேர்ந்த பிபின் குமார் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

News August 2, 2024

திருவையாறில் தஞ்சை ஆட்சியர் ஆய்வு

image

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணை காவிரி பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் திருவையாறு வந்தடைந்ததுள்ளதால் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை இரண்டு நாட்களில் ஒரு லட்சத்திற்கு மேல் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா ஆய்வு செய்தார்.

News August 2, 2024

கல்லணையில் நீர்வளத் துறை தலைமைச் செயலாளர் ஆய்வு.

image

கல்லணையில் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மேட்டூர் அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை பகிர்ந்தளிக்கும் முறையினை கல்லணையில் ஆய்வு மேற்கொண்டு கல்லணை தலைப்பில் திறந்து விடப்படும் தண்ணீர் காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடைமடை பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

News August 2, 2024

ஆடி பெருக்கு விழா காவிரி கரையில் ஆட்சியர் ஆய்வு.

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சி காவிரி ஆற்றுப்படித்துறையில் ஆடி பெருக்கு விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 2, 2024

மாற்றுத்திறனாளிக்கு உதவிய கும்பகோணம்  எம்.எல்.ஏ

image

கும்பகோணம் மாநகராட்சி, அண்ணா நகரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சரவணன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக இசையை கற்றுக் கொண்டு, இசைக் கருவியை வாடகைக்கு பெற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் இசையமைத்து வந்தார். அண்மையில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தனக்கு சொந்தமாக நவீன இசைக் கருவியை வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் எம்.எல்.ஏ உதவி செய்துள்ளார்.

News August 2, 2024

காவல்நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி.

image

திருவோணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(25) என்ற இளைஞரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது கார்த்திக் காவல்நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

News August 1, 2024

நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்.

image

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் மற்றும் அலுவலர்களுடன் நெல் கொள்முதல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ள நடைமுறை பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தனர். இதில் ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 1, 2024

தணிக்கையாளர்களுக்கு பயிற்சி முகாம்

image

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் பேரவை கூடத்தில், தமிழ்நாடு அரசு நேரடி நியமன அரசு தணிக்கை துறை தணிக்கையாளர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இப்பயிற்சி முகாமில் கலெக்டர் ப்ரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு தணிக்கையாளுர்களுடன் கலந்துரையாடினார். இதில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!