India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பின்னையூர் சேகர் என்பவர் விளைநிலங்களில் ஆடு கிடை போடும் தொழிழில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி ஆடுகளை பாதுகாக்க அங்கேயே உறங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் சேகரை கடுமையாக தாக்கி விட்டு 10 லட்சம் மதிப்புள்ள 150 செம்மறி ஆடுகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சேகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி சிறுகனூரில் ரூ 108 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் பன்முக சிறப்புகளை உருவாக்க இருக்கும் பெரியார் உலகம் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் பெரியாரை உலகமயமாக்குவோம் உலகத்தை பெரியார் மயமாக்குவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாஜக ஆட்சியை காப்பாற்ற பெவிகால் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது என திராவிடகழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் தெரிவித்தார்.
தமிழ்நாடு கைத்தறி இயக்குநர்களால் விருது தேர்வு ஜூலை 30ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி நாடெங்கிலும் உள்ள திறமைமிக்க நெசவாளர்கள் 60பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 10வது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு சென்னை, எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் தேசிய கைத்தறி நாள் விழாவில் 60 திறன்மிகு நெசவாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. இதை ஷேர் செய்யுங்கள்.
நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட பிற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, தஞ்சாவூரில் உள்ள 7,02,527 அட்டைதாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
தமிழ்நாடு அரசின் கும்பகோணம் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக பொன்முடி இன்று பணி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசின் சேலம் கோட்டத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த இவர் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனராக பணி ஏற்றுக்கொண்டார் . இங்கு நிர்வாக இயக்குனராக இயக்குநராக இருந்த மகேந்திரகுமார் சென்னை கும்மிடிபூண்டி கூடுதல் இயக்குனராக சென்றார்.
தமிழ்நாட்டில் இன்று ஏழு இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 104.36 டிகிரி பாரன்ஹீட், தஞ்சையில் 102.2, நாகப்பட்டினத்தில் 101.48, பாளையங்கோட்டையில் 101.3, திருச்சியில் 100.94, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வெளியே செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கி, மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதில், தஞ்சை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயமதி, ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளராகவும், பட்டுக்கோட்டை முதல்நிலை வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி பதவி உயர்வு வழங்கப்பட்டு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.