India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நரியங்குடியில் கடந்த 2019ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவர் ஆறுமுகம் என்பதும், கொலை செய்தவர் ராஜா என்பதும் 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மதியழகன் என்பவருக்கு சொந்தமான 100 ஆடுகளை திருடியதில் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராஜாவை இன்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் சங்கங்கள் இல்லாத 400 வருவாய் கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு ஆவின் பால் சங்கம் அமைக்க பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தரமான பாலுக்கு மானிய விலையில் கால்நடை தீவனம், சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை, காப்பீடு என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை வடகாடு, ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த தனபால் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை மேற்கொள்வர். இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், பரிந்துரையின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் திருச்சி மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் முதல்வர், அவரது மகன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆகியோரை சுட்டு கொல்வேன் என விக்ரமன் என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று வந்தது. இதை விசாரித்த போலீசார் முன்விரோதம் காரணமாக விக்ரமன் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சாவூரை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி அழைத்து வந்துள்ளனர்.
சுற்றுலா தொழில் முனைவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான சுற்றுலா விருது வழங்குவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து வரும் 20ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்புமாறு தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், தெரிவித்துள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று(ஆக.10) இரவு 7 மணி வரை தஞ்சாவூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் இராசாமிராசுதார் மருத்துவமனையில் மருத்துவம்,மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு விடுபட்ட முக்கிய தொகுப்புகளை ஒன்றினைக்கும் பயிலரங்கம் நடைபெற்றது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த அரசு மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான பயிற்ச்சி அளிக்கப்பட்டது.
தஞ்சை அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 8 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 2.5 அடி உயரமுள்ள ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் தினேஷ், ராஜேந்திரன்,ஜெய்சங்கர், ராஜ்குமார், ஹாரிஸ், அஜித்குமார், விஜய் ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இது 16ஆம் நூற்றாண்டு சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சிக்கு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது மந்திரி எஸ்.பி. சிங் பாகல் வழங்கினார்.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழையின் விவரம், திருவையாறில் 15 மிலி மீட்டரும், தஞ்சாவூரில் 12.5 மிலி மீட்டரும், பாபநாசத்தில் 63 மிலி மீட்டரும், கும்பகோணத்தில் 19 மிலி மீட்டரும், பூதலூரில் 18.2 மிலி மீட்டரும், வல்லத்தில் 7 மிலி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 28 மிலி மீட்டரும், பேராவூரணியில் 4.4 மிலி மீட்டரும், நாகுடியில் 15.6 மிலி மீட்டரும் மழை பெய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.