India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசியில் நடைபெற்று வரும் மூன்றாவது பொதிகை புத்தகத் திருவிழாவிற்கு நவ.22 அன்று சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ. இறையன்பு “புத்தகப் புழு” என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா “ஒளியுறும் அறிவு” தலைப்பிலும் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். நாளை (நவ.20) “நவீன இலக்கிய வாசிப்பின் வசீகரங்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லத்துரை சிறப்புரையாற்ற இருக்கிறார்.
தென்காசி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் நரசிம்மன் நேற்று(நவ.,18) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட ரேசன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வானது நவ.,25ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடைபெற உள்ளது. www.drbtsi.in இணையதளம் வழியாக அனுமதிச்சிட்டை பதிவிறக்கம் செய்து கலந்து கொள்ளலாம் என்றார். SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளவும்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உள்ளாட்சிகள் தினமான நவம்பர் ஒன்றாம் தேதி கிராமசபை கூட்டம் நடத்துவது வழக்கம். இந்நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் வருகிற 23ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் முகாமில் கலெக்டர் கமல் கிஷோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் உரிய நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், கோவை, பழனி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் வரை சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 20-ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இந்த ரயில் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
தென்காசி மாவட்டத்தில் 3வது பொதிகை புத்தகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, இன்று(நவ.,18) பேராசிரியர், ஞானசம்பந்தம் “கல்வி அழகே அழகு” என்ற தலைப்பில் பேச இருக்கிறார். நாள்தோறும் பல சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் மாணவர்கள், குடும்பத்துடன் வந்து இந்த புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று(நவ.,17) மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா அணையில் 15 மில்லி மீட்டர் மழை மற்றும் ராம நதியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாக இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி MLA பழனி நாடார் நேற்று(நவ.,17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்த்தில் நடைபெற்று வரும் 3வது பொதிகை புத்தகக் கண்காட்சியில் அதிக தொகைக்கான புத்தகங்களை வாங்கி பயனடையும் முதல் 3 பள்ளிகளுக்கு, தனது சொந்த நிதியில் இருந்து ஊக்கத்தொகையாக தலா ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வழங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவம்பர் (17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.