Tenkasi

News December 11, 2024

தென்காசி வழியாக செகந்திராபாத் – கொல்லம் ரயில்!

image

செகந்திராபாத் – கொல்லம்(07175) இடையே வரும் 19 & 26 ஆம் தேதி ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக வண்டி எண் கொல்லம் – செகந்திராபாத்(07176) இடையே 21 & 28 ஆகிய தேதிகளில் முதல் முறையாக சபரிமலை சிறப்பு ரயிலாக விருதுநகர் – தென்காசி – புனலூர் வழித்தடத்தில் இயங்க இருக்கிறது. நல்கொண்டா, குண்டூர், தெனாலி, ஒங்கோல், ரேணிகுண்டா, காட்பாடி, தி.மலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படுகிறது.

News December 11, 2024

தென்காசி மாவட்டத்தில் கனமழை: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “வடகிழக்கு பருவமழையால் தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள்(டிச.,13) ஒரு நாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பு பகுதியில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 10, 2024

தென்காசி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று (டிச.10) இரவு 10 மணி முதல் டிச.11 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

இளைஞருக்கு அரிவாள் வெட்டு – மேலும் ஒருவர் கைது

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று பொதிகை ரயிலில் பயணிக்க சென்ற இளைஞரை அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே, கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சூர்யா என்பவரை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2024

தென்காசி: திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புளியறை ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில், ஊராட்சியை சேர்ந்த ஊர்வசி மற்றும் விஜி திருநங்கைள் ஆகியோருக்கு வேலை அடையாள அட்டையை ஊராட்சி மன்ற தலைவர் இன்று(டிசம்பர் 10) வழங்கினார். அவர்கள் வேலை அடையாள அட்டை பெற்று வேலைக்கு வர முடியாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 10, 2024

ஆலங்குளம்: மதகு ஷட்டரை திருடி மது குடித்த 3 பேர் கைது!

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பெட்டைக் குளம் என்ற குளத்தின் மதகு ஷட்டரை திருடி மது அருந்தியுள்ளனர். திருடிய பணத்தில் பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியது வெளியே தெரிந்தது. இது குறித்து ஆலங்குளம் போலீசார் நேற்று(டிசம்பர் 9) வழக்குப் பதிந்து சந்தன மாரிமுத்து(38), சுமேஷ்(32), மகாதேவன்(30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News December 10, 2024

100 கிலோமீட்டர் வேகத்தில் நாளை சோதனை ஓட்டம்

image

தென்காசி – பகவதிபுரம் இடையே நாளை (10.12.24) அதிவேக ரயில் சோதனை ஓட்டம்நடைபெற உள்ளது . தென்காசி செங்கோட்டை பகவதிபுரம் இடையே 100 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. தற்போது தென்காசி – பகவதிபுரம் இடையே அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர் ஆக உள்ள நிலையில் 90 ஆக உயர்த்த திட்டம் இருப்பதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

News December 9, 2024

தென்காசியில் ஆர்ப்பாட்டம் அறிவித்த விடுதலை சிறுத்தை

image

நெல்லை மாவட்டத்தில் நடந்த விஜயகுமார் படுகொலையை கண்டித்தும், நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை கண்டித்தும், அதனை தடுக்க புதிய சட்டம் ஏற்ற வலியுறுத்தியும்  தென்காசி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் , வருகிற 11-ம் தேதி மாலை 4 மணி அளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

News December 9, 2024

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கல்

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (09.12.2024) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 41 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.58 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

News December 9, 2024

தென்காசியில் மனு கொடுக்க வந்த மக்கள் காத்திருப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகின்றது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் அதிக அளவில் வந்து மனு கொடுப்பதற்கு காத்திருக்கின்றனர். உள் அரங்கில் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடப்பதால் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு தாமதமாகின்றது. மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்ட பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தலாம் என மனு கொடுக்க வந்த பொதுமக்கள் புலம்புகின்றனர்.

error: Content is protected !!