India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி குளம் மற்றும் கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை, விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மண் பெற்றுக்கொள்ள tnesevel.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான சிவகிரி, சங்கரன்கோவில், செங்கோட்டை, ஆய்க்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. இதில் அதிகப்படியாக தென்காசி பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்த பதிவாக சிவகிரியில் 1 மில்லி மீட்டர் மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(மார்ச் 12) தென், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென்காசி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் துணை ஆணையர் கோமதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் மடப்பள்ளி மற்றும் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கோவில் அலுவலகத்தில் இன்று(மார்ச் 11) முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘தீய சக்தியை வேறொருப்போம்’ தலைப்பில் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நாளை(மார்ச் 12) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார். நயினார் நாகேந்திரன், பொன் பால கணபதி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் கோமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் தட்டச்சர், உதவி பரிசாரகர், உதவி யானைப்பாகன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் கோவில் அலுவலகத்தில் இன்று(மார்ச் 11) முதல் ஏப்.4ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று(11.3.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்படுள்ளது. ஆதலால் நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகம் சார்பில் பேரிடர் கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. *1077 & 04633-290548* இவற்றில் தொடர்பு கொண்டு மழை தொடர்பான புகார், உதவிக்கு தெரிவிக்கலாம். உடனே பகிரவும்.
சங்கரன்கோவில் புதிய நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2- 20 வரை உள்ள 18 கடைகளுக்கு 12.03.2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கும் 21 -37 வரை உள்ள 16 கடைகளுக்கு 13.03.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கும் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.