India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த சிவகிரி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி, அவரது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தென்காசியிலிருந்து 6 கி.மீ தொலைவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தூர் மதுநாதீசுவரர் கோயில் உள்ளது. இங்கு தெற்கு நோக்கி கைகளை அபயஹஸ்த நிலையில் வைத்து எழுந்தருளி இருப்பதால், சனி சம்பந்தப்பட்ட எந்த வித தோஷமும் இங்கு வந்து வணங்கினால் விலகிப்போகும். நீர்க்கிரகமான சனியை இலத்தூரில் வந்து வழிபட்டால் சர்க்கரை வியாதி பறந்தே போய்விடும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*
தென்காசி, ஆலங்குளத்தில் புதிய நான்கு வழி சாலை பணி நடைபெற்று வருகின்ற நிலையில் HP பல்க் அருகே நெடுஞ்சாலைத்துறையினர் கழிவுநீர் வாய்க்கால் பணிகள் நடைபெற்ற இடத்தில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இது குறித்து நேற்று WAY2NEWS-இல் செய்தி வெளியானது. செய்தியை தொடர்ந்து இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுரண்டை தொழிலதிபரும், வியாபாரிகள் சங்க பேரவை மாநில அமைப்பு செயலாளருமான எஸ்வி கணேசன் பேரன் எஸ்.அபி சிவராஜ் மாவட்ட மாநில நீச்சல் போட்டிகளிலும் வெற்றியடைந்து பல விருதுகளை பெற்றுள்ளார். அவரை நேற்று(மார்ச் 12ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் சிவராஜ்-க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ‘தீய சக்தியை வேரறுப்போம்’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் நேற்று(மார்ச் 12) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றார்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் இரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் பரத்வாஜ். முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். தமிழில் காதல் மன்னன், ஜேஜே ,ஜெமினி, அட்டகாசம் என பல படங்களுக்கும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் இசையமைத்துள்ளார். 2008-ம் ஆண்டில் கலைமாமணி விருது, 2 முறை பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார். அஜித்க்கு காதல் மன்னன் பெயரை பெற்று தந்த படத்திருக்கும் இசை அமைத்தவரும் இவரே. *ஷேர் செய்யவும்*
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலம் கிளைக்கு காய்கறி, கோழிக்கறி, முட்டை, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மீது ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்தில் படிவம் பெற்று வரும் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டம் சுரண்டை தொழிலதிபர் எஸ்வி கணேசன் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் புளியங்குடியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் என் அனுமதியின்றி எனது பெயரை தவறாக (Missuse) பாஜகவினர் விளம்பர நோட்டீஸில் போட்டுள்ளார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. உடன்பாடு இல்லாத இயக்கத்தின் நோட்டீஸ்ஸில் என் அனுமதி இன்றி எனது பெயரை போட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாவூர்சத்திரத்தில் வென்னி மலை முருகன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம், அழகுகுத்தி ஊர்வலம் என பக்தர்கள் அதிக அளவில் வருவதைத் தொடர்ந்து பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே கார், ஆட்டோ செல்ல முடியாத வகையில் காவல்துறை மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் அனைத்தும் செல்வ விநாயகர்புரம் பகுதி வழியாக விடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.