Tenkasi

News April 9, 2025

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

அம்பை, கல்லிடைக்குறிச்சி, தென்காசி, சங்கரன்கோவில் ,ராஜபாளையம் , சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, வழியாக இயங்கும் நெல்லையில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு அன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் திங்கள் கிழமையில் மே மாதம் முதல் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி முதல் 8 மணிக்கு முன்பதிவு துவங்கும்.

News April 9, 2025

தென்காசி சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

image

சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஜிப்லி செயலி மூலம் ஆபத்துகளை பயனாளர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது மேலும் பயனாளர்கள் தங்களது பயோமெட்ரிக் AI செயலியுடன் தங்களது தரவுகளை வழங்குகிறார்கள். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் இச்செயலி மூலம் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்கள் குற்றங்களுக்கு ஆளாகும் என போலீசார் எச்சரிக்கை*ஷேர்

News April 9, 2025

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை ஒரு சில தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மக்கள் குழந்தைகளுடன் எச்சரிக்கையுடன் வெளியில் சென்று வர அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

தென்காசி: வேலை தேடும் நபர்களுக்கு அறிய வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இங்கு <>கிளிக் செய்து<<>> சுய விவரங்களை பதிவு செய்யலாம். வேலை தேடும் உங்கள் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 9, 2025

தென்காசி: வேலை தேடும் நபர்களுக்கு அறிய வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இங்கு <>கிளிக் செய்து<<>> சுய விவரங்களை பதிவு செய்யலாம். வேலை தேடும் உங்கள் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 9, 2025

தென்காசி : பூச்சி கடித்து மூதாட்டி பலி

image

கடையம் அருகே மேல குத்த பாஞ்சான் பகுதியை சேர்ந்த சித்திரை வடிவு(65) என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

News April 9, 2025

கதவை திறந்து தூங்காதிங்க – தென்காசி காவல்துறை விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்க வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சொந்த மாவட்டம் மக்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News April 8, 2025

தென்காசி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தென்காசி மாவட்டம் முழுவதும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாவீரர் ஜெயந்தி 10.4.2025 வியாழக்கிழமை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கூடங்கள் மேற்கண்ட தினத்தில் மட்டும் மூடப்பட்டிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைடைய ரவுடி கைது 

image

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் (52) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!