Tenkasi

News January 21, 2025

தென்காசி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

image

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகோபாலபேரி பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி என்பவர் குமாரவேல் என்பவரின் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக புகார் செய்து இன்று(ஜன.21) ரூபாய் 4500 லஞ்சம் கொடுக்கும்கோது பத்மாவதியை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் கைது செய்தார்.

News January 21, 2025

பீடி சக்கரவர்த்தி பேரன் மறைவு: முன்னாள் மா.செ அஞ்சலி

image

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் பகுதியில், பீடி சக்கரவர்த்தி த.பி.சொக்கலால் ராம் சேட் பேரன் மகேஷ் ராம் சேட் இன்று(21/1/25) காலமானார். தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பொ.சிவபத்மநாதன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 21, 2025

ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாவட்ட செயலாளருக்கு வீரவாள் பரிசு

image

தென்காசி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோருக்கு வீரவாள் பரிசளித்தனர். உடன் 5ஆம் கட்டளை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News January 21, 2025

ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் அனுமதி!

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றால சுற்றுவட்டாரத்தில் 18ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டி வருகிறது. இதனால் இன்று 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News January 21, 2025

ஆலங்குளத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா

image

ஆலங்குளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக 108 சேவை மூலம் முதலுதவி அளிக்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி தலைமை வகித்தார். இதில் ஏராளமான பொது மக்களும் அலுவலக பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வாகன ஒட்டுநர்களும் கலந்து கொண்டனர்.

News January 20, 2025

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 1835 வழக்குகள் பதிவு

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்தில் 121 இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் 4974 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது. இதில், 1835 வாகனங்கள் மீது உரிய ஆவணங்கள் இல்லாததன் காரணமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

News January 20, 2025

தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு

image

தென்காசி கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்க நாளை(ஜன. 21) மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்” என தெரிவித்தார்.

News January 20, 2025

தென்காசி மக்கள் குறைத்தீர் முகாம் நிறைவு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் இன்று(ஜன.20) மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது குறைகளை தீர்க்க கோரி 455 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

News January 20, 2025

பாஜக நிர்வாகி மதிமுகவில் இணைந்தார்

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாஜக முக்கிய நிர்வாகி மாடசாமி என்ற கண்ணன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஓபிசி பிரிவு தென்காசி மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் கட்சியில் தனக்கு அங்கீகாரம் இல்லை என கூறி நேற்று வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.

News January 20, 2025

கனிம வள கொள்ளை: பாஜக தென்காசி தலைவர் ஆவேசம்

image

தென்காசி மாவட்ட புதிய பாஜக தலைவர் ஆனந்தன் நேற்று(ஜன.19) கூறியதாவது, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற அனைத்து பூர்வாங்க பணிகளும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும். அதிகமான அளவில் சூறையாடப்படும் கனிமவள கொள்ளை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மாநில தலைமை ஆலோசனையின்படி நடத்தப்படும் என்றார்.

error: Content is protected !!