India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னக ரயில்வே வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் வரும் ஏப்ரல் கடைசி மாதத்தில் நடைபெற உள்ளது. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை எனக்கு தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் நம்பர் 6382081840 மூலமாக தெரிவிக்குமாறு தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்த வல்லம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை என தெரியவந்துள்ள நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் <
பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருளியுள்ள கற்குடிபகுதி சேர்ந்த திருமலை குமார் தெற்கு மேட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென காதலி உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காதலன் திருமலை குமார் காதலியை வீடு தேடி சென்று அறிவாளால் வெட்டினார். அரிவாளால் வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் தென்னக ரயில்வேயின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ரயில்வே சம்பந்தமாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்கள் ,ஆலோசனைகள் மற்றும் குறைகளை கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணில் *63820 81840* தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தென்காசி மக்களே இதை பயன்படுத்தி கொள்ளுங்கள்* SHARE!!
ஊத்துமலை அருகே உள்ள மருகாலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (28). இவரது மனைவி கவிதா (24) கர்ப்பிணி. சென்னையில் வேலை பார்த்து வந்த கார்த்திக்கு ராஜா தற்போது ஊரில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டே இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தென்காசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஏப். 16,17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் ஏப்.17 காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இசக்கி மஹாலில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
Sorry, no posts matched your criteria.