Tenkasi

News July 10, 2025

கணவர் மடியில் பிரிந்த மனைவியின் உயிர்

image

குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் திரண்டு வந்து குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையைச் சார்ந்த ராமநாதன், தெய்வானை தம்பதியினர் நேற்று இரவு 11 மணியளவில் குளித்துவிட்டு நடந்து செல்லும் பாதையில் இருந்த போது கணவர் மடியில் சாய்ந்து நிலையில் தெய்வானைக்கு மூச்சு திணறல் காரணமாக உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

News July 10, 2025

தென்காசியில் குடும்ப பிரச்சனை; பெண் தூக்கிட்டு தற்கொலை

image

தென்காசி, சங்கரன்கோவில் அருகே முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கருப்பன் மனைவி முருகலட்சுமி (45) . நேற்று இரவு குடும்ப பிரச்சினை காரணமாக ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து சின்னகோவிலாங்குளம் போலீசார் விசாரணை.

News July 9, 2025

தென்காசி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஜூலை 12க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News July 9, 2025

தென்காசியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

தென்காசி மாவட்ட சங்கம் மருத்துவமனை மூலம் மருத்துவம் மற்றும் யோகா சார்ந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயதுவரம்பு 40. மாத ஊதியம் ரூ.15,000. விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 16. www.tenkasi.nic என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

News July 8, 2025

தென்காசியில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

News July 8, 2025

10 ஆம் வகுப்பு போதும் – ரயில்வேயில் வேலை

image

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் https://www.rrbapply.gov.in என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 8, 2025

உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 8, 2025

தென்காசியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

image

தென்காசி, சங்கரன்கோவில் அருகே நெடுங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (விவசாயி). நேற்று இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் மாரியப்பன் காலில் கடித்தது. உடனே அவரது உறவினர்கள் மாரியப்பனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாரியப்பன் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News July 7, 2025

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் – ஆட்சியர்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் ஜுலை 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்கிழமை நாளை (08.07.2025) தென்காசி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. குறைகேட்பு முகாமிலும் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

News July 7, 2025

சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி பெண் பலி

image

தென்காசி முதலியார் தெருவை சேர்ந்தவர் குருநாதன் (60). இவரது மனைவி தும்பி அம்பாள் (55). சங்கரன் கோவில் – நெல்லை சாலையில் நவ நீதகிருஷ்ணாபுரம் விலக்கு அருகே தும்பி அம்பாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் தும்பியம்மாள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!