India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்பவர்வடகரையை சேர்ந்த ஒற்றைப்போராளி வைத்திலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பன்னெடுங்காலமாய் பயன்பாட்டில் இருந்துவரும் பதிவுத்தபால் முறையை வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்வதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி தென்காசி அஞ்சல் அலுவலகம் முன்பு 01.09.2025 அன்று 8 மணி முதல் 10 மணி நேரம் பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
தென்காசி, புளியங்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சென்ற ஷேகம்மாள்(52) அம்பிகா(40) ராமலட்சுமி(46) என்ற 3 பெண்களை அங்கிருந்த கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி காவல் துறையினர் அங்கு சென்று காயமடைந்த பெண்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தென்காசி மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு (ஆகஸ்ட்.07) இன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் சங்கரன்கோவில் நகர பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. திருநெல்வேலி, ராஜபாளையம், கோவில்பட்டி, தென்காசி போன்ற ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளுக்கு மாற்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தபட்டுள்ளன. SHARE பண்ணுங்க.
தென்காசி மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் https:/www.tnagrisnet.tn.gov.in/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் உயிர்ம விவசாயிகள் வலைதளத்தில் பதிவு செய்ய 15.09.2025-ம் தேதிக்குள் பதிவுக்கட்டணம் ரூ.100/- செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி இளைஞர்களே, தமிழக அரசு ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன.<
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆக.5 நேற்று தென்காசி மாவட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், எம்.பி. ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.
தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. இங்கு <
தென்காசி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ₹15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தென்காசியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.