India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் அந்தேதையா அன்னை யோஜனா மற்றும் முன்னுரிமை வகை குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகையை ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். வெளியிடங்களில் பணிபுரிவோர் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள ரேசன் கடைகளில் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை எண்ணை கொண்டு கைவிரல் ரேகை பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் இன்று(மார்ச் 5)வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் டாக்டர் சுசிகரன், பேரூராட்சி தலைவர் கணேஷ், தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலம் கிளைக்கு காய்கறி, கோழிக்கறி, முட்டை, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மீது ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்தில் படிவம் பெற்று இன்று(மார்ச் 5) முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஹோட்டல் தமிழ்நாடு குற்றால மேலாளர் தெரிவித்துள்ளார். SHARE IT.
இன்று(மார்ச் 5) 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி மார்ச் 27ஆம் தேதி நிறைவடைகிறது. தென்காசி மாவட்டத்தில் இந்த தேர்வை 7,852 மாணவர்களும், 8,612 மாணவிகளும் எழுதுகின்றனர். மொத்தமாக 11,464 மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வை கவனமுடன் எந்த வித அச்சமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே!
மாவட்ட காவல்துறை சார்பில் தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்று (04.03.2025) புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி போன்ற பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு தேவையான குறைகள், உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளுடன் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 04.03.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்9498191451-ஐ தொடர்புகொள்ளலாம்.
தென்காசி மாவட்ட பாஜக சார்பில் வரும் 12ஆம் தேதி புளியங்குடியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார். தீய சக்திகளை வேரறுக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அழைப்பு விடுத்து, காவிச் சொந்தங்கள் திரளாக குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று(மார்ச் 4) 4வது நாளாக தடை நீடித்து வருகிறது. மற்ற அருவிகளில் தடையில்லை. இன்று உள்ளூர் விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. SHARE IT.
அய்யா வைகுண்டரின் 193வது அவதார திருநாளை முன்னிட்டு இன்று(மார்ச் 4) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே.கமல் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 03.03.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்9498191451-ஐ தொடர்புகொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.