Tenkasi

News August 14, 2025

தென்காசி வழியாக புதிய ரயில் இயக்கம்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது. *மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

தென்காசி வழியாக பெங்களூருக்கு ஆகஸ்.17 புதிய ரயில் இயக்கம்

image

தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17-ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18-ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19-ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது.

News August 14, 2025

தென்காசி: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை… APPLY!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 14, 2025

தென்காசி மின்தடைகள் தெரடர்பான புகார் எண்கள்!

image

நம்ம தென்காசியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.. மின் தடை மற்றும் சூரைக்காற்று கனமழையின் காரணமாக மின்சாதனங்கள் சேதம் ஏற்பட்டால். இந்த எண்களுக்கு அழையுங்க!
⏩ 9445859032
⏩ 9445859033
⏩ 9445859034
இந்த எண்களை SAVE-ஐ பண்ணி…… மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 14, 2025

தென்காசி: விழிப்புணர்வுடன் இருங்க – காவல்துறை!

image

தென்காசியில் CYBER CRIME மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குற்றப்பிரிவு போலீசார் பேசுவதுபோல வீடியோ அழைப்பில் “நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள்” என்றும், நீதிமன்றத்தில் இருந்து பேசுவதுபோல பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. www.cybercrime.gov.in -இல் புகார் அளிக்கலாம். நம்ம தென்காசி மக்கள் இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.. நம்ம மக்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுங்க!

News August 14, 2025

தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை

image

சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்காசி ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பார்சல் அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

News August 14, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (13.08.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி,புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஆக.22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. 8 ,10 & 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. (ம) டிப்ளமோ படித்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்ய வரவுள்ளன. *ஷேர் செய்து உதவுங்கள்

News August 13, 2025

தென்காசி: வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை

image

வாசுதேவநல்லூர் ராமையா தெருவைச் சேர்ந்த பூவதி (26), புளியங்குடி தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். வேலை கிடைக்காத மனஉளைச்சலில், ஆக.11ம் தேதி மாலை பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வாசுதேவநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News August 13, 2025

தென்காசி: மமக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

image

தென்காசி நகர மனித நேய மக்கள் கட்சி 15வது வார்டு கிளை பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடந்தது. இதில் நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை வகித்து, நகர செயலாளர், பொருளாளர் மற்றும் நகர துணை அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.

error: Content is protected !!