India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் நவ. 3ம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு தென்காசி வழியாக மறுநாள் சென்னை தாம்பரம் சேருகிறது. மறு மார்க்கத்தில் தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் நவ.4ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை தென்காசி வழியாக நெல்லை வந்து சேர்வதாக தெற்கு ரயில்வே இன்று(அக்.27) அறிவித்துள்ளது. SHARE IT
தென்காசி மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று(அக்.,26) மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் செயல்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார். SHARE IT.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று(26.10.2024) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று(26.10.2024) சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் தென்காசி மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் இளைஞர் திறன் விழா இன்று(அக்.,26) கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று (அக்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் கால்நடை கணக்கெடுக்கும் பணி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதுவரை 20 கால்நடை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. 21 வது கால்நடை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கும் இந்த பணி கால்நடை பராமரிப்பு துறைகளால் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.
தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (அக்.26) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (அக்.25) நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்து விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தியடிகள் பிறந்த நாளை ஒட்டி வரும் நவம்பர் 12ஆம் தேதியும், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை ஒட்டி வரும் 14ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (அக்.25) கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய மாவட்ட இயக்குநர் ராஜேஸ்வரி இன்று(அக்.,25) விடுத்துள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் 19-45 வயது வரை உள்ள ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய கைப்பேசி பழுது நீக்குதல் குறித்த பயிற்சி இலத்தூர் ஐஓபி ஊரக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 30 நாள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 75025 96668 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
தென்காசி மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்கள் பகுதி வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். நெல்லையிலிருந்து தென்காசி சங்கரன்கோவில் வழியாக வாரம் ஒரு முறை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் கொல்லத்திலிருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக வரும் 27ஆம் தேதி ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.