Tenkasi

News August 10, 2024

தென்காசி மாவட்டத்திற்கு மழை

image

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (ஆக.10) இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தேனி, மதுரை, நெல்லை, விருதுநகர், குமரி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.

News August 10, 2024

கடையம் தோரண மலையில் பிரபல நடிகர் தரிசனம்

image

தென்காசி கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோயில் உள்ளது. தற்போது கடையம் சுற்றுவட்டார பகுதியில் இயக்குநர் சுந்தர்.சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பிரபல நடிகரான சந்தான பாரதி நடிக்கிறார். இந்த நிலையில் இன்று(ஆக.,10) காலை தோரணமலை முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செம்பகராமன் செய்திருந்தார்.

News August 10, 2024

தென்காசியில் நாளை மறுநாள் கனமழை

image

தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.,12) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

மயக்கமடைந்த மாணவிகளுக்கு மா.செ. ஆறுதல்

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 15 க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று திடீர் மயக்கம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையிலான திமுகவினர் மாணவிகளுக்கு ஆறுதல் கூறியும், சிகிச்சையை தீவிரப்படுத்த வேண்டும் என மருத்துவ உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் பேசினர்.

News August 9, 2024

தென்காசி ஆதிதிராவிடர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தாட்கோ மூலமாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள், HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில (B.Sc, Computing Desgining, B.Com, BCA&BBA) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளோர் <>https://www.tahdco.com/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

News August 9, 2024

திருநங்கைகள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள், ஆக.,30 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,8) கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 9, 2024

தென்காசியில் ஆக.,16ல் வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டு மையம் குத்துக்கல்வலசையில் செயல்பட்டு வருகிறது. இம்மையம் சார்பில் ஆக.,16 ஆம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,8) கேட்டுக்கொண்டார். SHARE IT.

News August 9, 2024

செங்கோட்டை பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதி புளியறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அவர்கள் நேற்று(ஆக.,8) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்து ஆசிரியர்களுடன் பள்ளி வளர்ச்சி பற்றி கலந்துரையாடினார்.

News August 8, 2024

விளையாட்டு போட்டி – ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தென்காசி மாவட்டம் சார்பாக சதுரங்கம், கையுந்து விளையாட்டு போட்டி வரும் 17ஆம் தேதி  காலை 7 மணிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஆக.08) கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 8, 2024

தென்காசி மாவட்டத்திற்கு மழை

image

தென்காசி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!