Tenkasi

News August 13, 2024

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் இன்றைய(ஆக.,12) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரி ரூ.80, தக்காளி ரூ.15, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகற்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.40, இஞ்சி ரூ.200 கேரட் ரூ.120க்கும் விற்பனை.

News August 13, 2024

மாணவர்களுடன் உரையாடிய சங்கரன்கோவில் MLA

image

உலக யானைகள் தினமான நேற்று(ஆக.,12) சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யானைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வனத்துறை சார்பாக நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற MLA ராஜா, வனப்பகுதியில் யானைகளின் முக்கியத்துவம் மற்றும் அதனை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

News August 13, 2024

தென்காசியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 12, 2024

தென்காசியில் நாளை 4 ரயில்கள் பகுதியாக ரத்து

image

தென்காசி – செங்கோட்டை இடையே ரயில் சிக்னல் பராமரிப்பு பணி காரணமாக 4 ரயில்கள் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். மதுரை – செங்கோட்டை ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். செங்கோட்டை – மதுரை ரயில் தென்காசியில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2024

தென்காசி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஆக.12) வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் இணைய வழியில் வரி செலுத்தும் சேவை, மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், டிஎன் பாஸ் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 12, 2024

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஆக.,12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.

News August 12, 2024

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் இன்றைய(ஆக.,12) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.15, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.80, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.40, இஞ்சி ரூ.160 கேரட் ரூ.120க்கு விற்பனை.

News August 11, 2024

தென்காசி மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழக்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி மழை நிலவரங்களை கமெண்டில் சொல்லவும்*

News August 11, 2024

மாணவியை பாராட்டிய சங்கரன்கோவில் MLA

image

விழுப்புரத்தில் நடைபெற்ற மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டியில் உலக சாதனை படைத்த சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷண்மதிக்கு, சங்கரன்கோவில் எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று(ஆக.,10) பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா MLA மாணவியை பாராட்டினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, வெள்ளத்துரை & புளியங்குடி நகர மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன் இருந்தனர்.

News August 10, 2024

தென்காசிக்கு வந்த அயலக தமிழர்கள்

image

தென்காசி மாவட்டத்திற்கு “வேர்களைத் தேடி” என்ற பண்பாட்டு சுற்றுலா திட்டத்தின் மூலம் வருகை தந்த, 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் மாணவர்களை ஐந்தருவியில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி, IAS மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

error: Content is protected !!