Tenkasi

News August 18, 2024

தென்காசியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.18) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கலாம். எனவே வெளியே செல்வோர் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT

News August 17, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 17, 2024

தென்காசி: தவறவிடப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் 368 வங்கி கணக்குகளிலிருந்து ஆன்லைன் வாயிலாக ரூ.15,96,77,964 முடக்கப்பட்டன & ஏராளமான செல்போன்கள் தவறவிடப்பட்டன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் தலைமையில் தவறவிட்ட ரூ.15.50 லட்சம் மதிப்பிலான 81 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

News August 17, 2024

தென்காசிக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்

image

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிப்பின் காரணமாகவும் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று(ஆக.,17) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

News August 16, 2024

பஞ்சாயத்து தலைவர் டிஸ்மிஸ்: கலெக்டர் அதிரடி

image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் இரா.குத்தாலிங்கராஜன் (எ) கோபி என்பவர் ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.

News August 16, 2024

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,16) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, குமரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News August 16, 2024

லீவ் கொடுக்காத 132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று(ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

News August 16, 2024

குற்றாலத்தில் ‘சாரல் திருவிழா’ இன்று தொடக்கம்

image

குற்றால ‘சாரல் திருவிழா’ இன்று(ஆக.,16) தொடங்கி 4 நாள் நடைபெறுகிறது. விழாவில் முதலாவதாக, ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் காலை 10 மணிக்கு மலர் கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, கலைவாணா் அரங்கில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகிக்கிறார். எம்.பி.க்கள் துரை வைகோ, ராணி ஸ்ரீகுமாா், பழனிநாடாா் எம்எல்ஏ முன்னிலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

News August 16, 2024

கனரக லாரிகள் செல்ல கட்டுப்பாடு விதிப்பு

image

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அதிகளவிலான கனரக லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 முதல் மாலை 3 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை, சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை கனரக லாரிகள் செல்ல கட்டுப்பாடு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

News August 15, 2024

தொழில் கடன் முகாமிற்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான எம்.எஸ்.எம்.இ சிறப்புத் தொழில் கடன் முகாம் ஆக.19 முதல் செப்டம்பர். 6 வரை நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!