Tenkasi

News November 16, 2024

புத்தக கண்காட்சியில் அறிவியல் செயல்முறை – ஆட்சியர் தகவல்

image

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3வது பொதிகை புத்தக கண்காட்சி நேற்று முதல் தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாள்தோறும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் அறிவியல் செயல்முறை வருகிற 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார்.

News November 16, 2024

தென்காசி மாவட்டத்திற்கு ரூ.3 கோடி தேர்தல் மதிப்பு ஊதியம்

image

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தேர்தல் பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர் முதல் உதவியாளர் வரை அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் ரூ.171 கோடி மதிப்பூதியம் அனுமதி வழங்கி தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 தொகுதிகளைக் கொண்ட தென்காசி மாவட்டத்திற்கு ரூ.3 கோடியே 58 லட்சத்து 14 ஆயிரத்து 727 கிடைக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.

News November 16, 2024

70% ஆட்சியர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள் – துரை வைகோ

image

புளியங்குடி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று(நவ.15) கலந்து கொண்டு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி பேசுகையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று ஆட்சியர், எஸ்பி மற்றும் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். நான் சந்திக்கக்கூடிய 70% மாவட்ட ஆட்சியர்கள் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் என்றார்.

News November 15, 2024

தென்காசி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவம்பர் (15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

தென்காசியில் மூன்றாவது புத்தகத் திருவிழா துவக்கம்

image

தென்காசி ஐ சி ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பாக மூன்றாவது பொது புத்தக திருவிழா தொடங்கியது. இந்நிகழ்ச்சி, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News November 15, 2024

தென்காசி மாவட்ட மழை நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையம் ராமநதி அணையில் 12 மில்லி மீட்டர், கருப்பா நதியில் 7 மில்லி மீட்டர், குண்டாரில் 8.80 மில்லி மீட்டர், கடனா அணையில் 2 மில்லி மீட்டர், தென்காசியில் 8 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 6 மில்லி மீட்டர், சிவகிரியில் 2 மில்லிமீட்டர் மழைபதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 15, 2024

தென்காசி புத்தகத் திருவிழா: 10 நாள் இலவச பேருந்து வசதி

image

தென்காசி ஐசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று(நவ.,15) முதல் நவ.,24ஆம் தேதி வரை 3வது பொதிகை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு வரும் மாணவர்களின் வசதிக்காக அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், பாபநாசம் 5 பணிமனைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News November 15, 2024

குரூப்-4 தேர்வில் முதலிடம்: எம்எல்ஏ ராஜா பாராட்டு

image

சங்கரன்கோவில் காயிதே மில்லத் நான்காம் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப்(20). இவர் பிளஸ்-டூ முடித்து தட்டச்சு சுருக்கெழுத்தும் படித்துள்ளார். தொடர்ந்து குரூப்-4 தேர்வு எழுதிய நிலையில் இதற்கான முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் சிறுபான்மையினர் பிரிவி, தமிழகத்தில் சுருக்கெழுத்தர் பிரிவில் முதலிடம் பிடித்த தேர்ச்சி பெற்றார். அவரை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நேற்று(நவ.,14) பாராட்டினார்.

News November 15, 2024

பயிர் காப்பீடு செய்ய காலக்கெடு: தென்காசி கலெக்டர்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் மாதங்களில் விதைப்பு நடவு செய்யப்படும் பயிர்களை காப்பீடு செய்யலாம். பிரீமியம் செலுத்த காலக்கெடு, உளுந்து பாசிப்பயறு ஆகி பயிர்களுக்கு இன்று(நவ.,5) எனவும், மக்காச்சோளம் பருத்தி ஆகிய பயிர்களுக்கு 30ஆம் தேதி எனவும், நெல் பயிருக்கு டிசம்பர் 16ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். SHARE IT.

News November 15, 2024

தென்காசியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் காலை 10 மணிக்கு பிரானூர் பார்டரில் நடைபெறுகிறது. இலஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தென்காசி ஐசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் மாலை 5 மணிக்கு 3வது பொதிகை புத்தகத் திருவிழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!